உல்லாசத்தின் போது இடையூறு.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளை கொடூர கொன்ற காமவெறி பிடித்த தாய்..!

By vinoth kumarFirst Published Jun 4, 2021, 7:33 PM IST
Highlights

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கம்போது இடையூறு செய்த 3 வயது மகனை காதலனுடன்  சேர்ந்து பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கம்போது இடையூறு செய்த 3 வயது மகனை காதலனுடன்  சேர்ந்து பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுரவாடா மாரிகவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சிந்துஸ்‌ரீ(3) என்ற மகள் உள்ளார். இதற்கிடையே ரமேஷ் பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று வந்தார். வரலட்சுமி அதே பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.  இந்த தொழிற்சாலையில் வேலை செய்த ஜெகதீஷ் என்ற வாலிபருடன் வரலட்சுமிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததால் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், கள்ளத்தொடர்பை கைவிட வரலட்சுமி மறுத்துவிட்டார். தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலன் வீட்டில் தஞ்சம் அடைந்தார். கள்ளக்காதலனுடன் இரவில் தனிமையில் இருக்கும்போது அடிக்கடி குழந்தை அழுதுள்ளது. இதனால், கள்ளக்காதலன் மற்றும் வரலட்சுமிக்கு குழந்தை மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தை சிந்துஸ்ரீ உடல்நலம் பாதித்து உயிரிழந்துவிட்டதாக கணவர் ரமேசுக்கு வரலட்சுமி கூறியுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த கணவர் குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வரலட்சுமி மற்றும் கள்ளக்காதலனிடம் தீவிர விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, இருவரும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

click me!