எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அடுத்தவன் பொண்டாட்டியுடன் உல்லாசம்.. போலீஸ் ஸ்டேஷன் அருகே நடந்த பயங்கரம்.!

Published : Mar 15, 2022, 02:13 PM IST
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அடுத்தவன் பொண்டாட்டியுடன் உல்லாசம்.. போலீஸ் ஸ்டேஷன் அருகே நடந்த பயங்கரம்.!

சுருக்கம்

சென்னை கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி(27).  இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் மீது ராஜமங்கலம், கொளத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. 

சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காவல் நிலையம் அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி(27).  இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் மீது ராஜமங்கலம், கொளத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. 

ரவுடி கொலை

இந்நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் கொளத்தூர் மக்காரம் தோட்டம் வழியாக ராஜமங்கலம் காவல் நிலையம் அருகே பழனி சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. அப்போது, அந்த மர்ம கும்பல் பழனியை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, அக்கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது. 

இதையும் படிங்க;- சென்னையில் பயங்கரம்.. துணை நடிகை கத்திமுனையில் வாயை பொத்தி மாறி மாறி பலாத்காரம்..!

கள்ளக்காதல் விவகாரம்

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பழனியின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆதி என்கின்ற ஆதிகேசவன், விக்னேஷ், சரண்ராஜ்  உள்ளிட்ட சிலர்  பழனியுடன் ஒரே வழக்கில் சிறையில் இருந்ததாகவும் பழனி தனது கூட்டாளி மனைவி ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். கள்ளக்காதலை கைவிடுமாறு பல எச்சரித்தும் விட மறுத்ததால் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!