திருமணமான காதலியை என்னுடன் அனுப்பி வையுங்கள் … போலீசாரிடம் அடம் பிடித்த காதலன் !!

Published : May 07, 2019, 08:03 AM IST
திருமணமான காதலியை என்னுடன் அனுப்பி வையுங்கள் … போலீசாரிடம் அடம் பிடித்த காதலன் !!

சுருக்கம்

திருமணமாகி 2 குழந்தைகளை பெற்றறெடுத்த காதலியை கடத்திச் சென்ற இளைஞர் ஒருவர். அவரை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என போலீசாரிடம் அடம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காட்டை சேர்ந்த  ஷர்மிளா என்ற 28 வயது இளம்பெண் கணவர்  குமார் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில்  2 நாட்களுக்கு முன்பு ஷர்மிளா திடீரென குழந்தைகளுடன் மாயமானார். இதுபற்றி அவரது கணவர் குமார் பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் ஷார்மிளா  தனது திருமணத்துக்கு முன்பு காதலித்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த முரளி என்பவரை சந்திக்க சென்றிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஷர்மிளாவை  வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கணவருடன் செல்ல மறுத்து விட்டதாக தெரிகிறது. மேலும் காதலனுடன் வாழ விரும்புவதாகவும் கூறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஷர்மிளாவுக்கு  அறிவுரைகள் கூறி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே விசாரணை நடத்துவதற்காக முரளியையும் போலீசார் வரவழைத்து இருந்தனர். காதலியை பெற்றோருடன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் போலீசாருடன் கடும்  வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

தன்னுடன் தான் காதலி ஷர்மிளாவை அனுப்ப வேண்டும் என்று கூறி போலீஸ் நிலையம் எதிரில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.


இதனால் செய்வது அறியாது திகைத்த போலீசார் முரளியின் காதலி ஷர்மிளாவை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி முரளியை செல்போன் டவரில் இருந்து கீழே இறங்க செய்தனர். முரளி கீழே இறங்கியதும் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஷர்மிளா விவகாரத்தில் எந்த முடிவு எடுப்பது என்று போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவேற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

அடங்காத 26 வயது அண்ணி சாந்தி.. தீராத வெறியில் இருந்த கொழுந்தன்.. இறுதியில் நடந்த அலறல் சத்தம்.!
அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?