எங்க அண்ணி டிரஸ்ஸே இல்லாம எவ்வளவு அழகாக இருக்கா பாரு... செல்போனில் ஆபாச படம் காட்டிய கணவர்... மனைவி எடுத்த விபரீத முடிவு..!

By vinoth kumarFirst Published Jan 23, 2020, 3:07 PM IST
Highlights

எனது அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார் பார் என்றும், தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டியும் எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார் என்று எனது அக்கா கூறினார். நேற்று முன்தினம் நாங்கள் புறப்பட்டு சென்னை வந்து கொண்டிருக்கும் போதே, எனது அக்கா தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்தது. எனவே எனது அக்காவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

சென்னையில் அண்ணியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை தட்டிக்கெட்டதால் திருமணமான 4 மாதங்களில் போலீஸ்காரரின் மனைவியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் ஒதியடிகுப்பத்தை சேர்ந்தவர் அருள் (38). இவர் போலீசில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவரது மகள் ராஜேஸ்வரிக்கும் (30) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்கள் சென்னை மயிலாப்பூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், ராஜேஸ்வரி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் பட்டினப்பாக்கம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “எனது அக்கா ராஜேஸ்வரி கடந்த 20-ம் தேதி என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் எனது கணவரும், அவரது அண்ணி வெண்ணிலாவும், ‘நீ வரும் போது என்ன கொண்டு வந்தாய், நாங்கள் சந்தோஷமாக இருக்க நீ இடையூறாக இருக்கிறாய், நீ வீட்டை விட்டு வெளியே போ அல்லது செத்து விட்டால் சொத்து அனைத்தும் எனக்கே கிடைக்கும்’ என்று கூறி தினமும் கொடுமைப்படுத்துகிறார்கள் என கதறியபடி கூறினார். 

மேலும், எனது அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார் பார் என்றும், தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டியும் எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்துகிறார் என்று எனது அக்கா கூறினார். நேற்று முன்தினம் நாங்கள் புறப்பட்டு சென்னை வந்து கொண்டிருக்கும் போதே, எனது அக்கா தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்தது. எனவே எனது அக்காவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். திருமணமாகி 4 மாதங்களிலேயே இளம்பெண் உயிரிழந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

click me!