நள்ளிரவில் உல்லாசத்திற்கு அழைத்த கேரள கள்ளக்காதலன்.. அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தமிழக கள்ளக்காதலி..!

By vinoth kumarFirst Published Mar 16, 2020, 1:16 PM IST
Highlights

ராஜாவுக்கும் வளர்மதிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ராஜா வளர்மதி வீட்டுக்கு வந்த போது உல்லாசத்திற்கு அழைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வளர்மதி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராஜாவை சரமாரியாக வெட்டினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

போடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் பிஎல் ராம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (30) இவருக்கும் போடி நந்தவனம் தெருவை சேர்ந்த வளர்மதி (30) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. வளர்மதிக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், ராஜாவுக்கும் வளர்மதிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ராஜா வளர்மதி வீட்டுக்கு வந்த போது உல்லாசத்திற்கு அழைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வளர்மதி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராஜாவை சரமாரியாக வெட்டினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, வளர்மதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!