சீமந்தம் செய்ய சொல்லி கேட்ட 7 மாத கர்ப்பிணி மனைவி.. ஜல்லிக் கரண்டியால் அடித்தே கொன்ற கணவன்..

By Ezhilarasan BabuFirst Published Aug 27, 2022, 9:58 AM IST
Highlights

சீமந்தம் செய்ய சொல்லி கேட்ட கர்ப்பிணி மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம்  நடந்துள்ளது. மனைவி 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கணவன் இக்கொடூரத்தில் ஈடுபட்டுள்ளார்.

சீமந்தம் செய்ய சொல்லி கேட்ட கர்ப்பிணி மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம்  நடந்துள்ளது. மனைவி 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கணவன் இக்கொடூரத்தில் ஈடுபட்டுள்ளார்.

முழு விவரம் பின்வருமாறு:-  கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த சின்ன வடவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அற்புதராஜ் (20) விருதாச்சலம் காய்கறி சந்தையில் கூலி வேலை செய்து வருகிறார், பெரிய நகரிலுள்ள பேக்கரியில் வேலைசெய்து வந்தார் சுதாகர் நகரைச் சேர்ந்த  சக்தி (18) என்ற பெண்ணை இவர் காதலித்து வந்தார். இதில் திருமணத்திற்கு முன்பு இருவரும் நெருங்கி பழகி வந்ததால், சக்தி கர்ப்பமானார்,  தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அவர் வற்புறுத்தி வந்ததால்  கடந்த  ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது,  இருவரும் சக்தியில் தாய் வீட்டிலேயே தங்கி வந்தனர்.

சக்தி 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் தனக்கு சீமந்தம் செய்ய வேண்டுமென கணவனிடம் கூறி வந்தார், ஆனால் கணவன் அற்புதராஜ் ஏற்கனவே ஏகப்பட்ட கடன் சுமையில் தவித்து வருகிறேன், இந்நிலையில் சீமந்தம் செய்ய முடியாது என மறுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே  அடிக்கடி தகராறு ஏற்பட்டது, இந்நிலையில் நேற்று முன்தினம் சீமந்தம் செய்ய சொல்லி மீண்டும் மனைவி சக்தி வற்புறுத்தியுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த கணவன் அற்புதராஜ் வீட்டில் இருந்த ஆயுதத்தால் மனைவியை சரமாரியாக  தாக்கினார்.

அதில் சக்தி படுகாயமடைந்து துடிதுடித்து உயிரிழந்தார், சக்தி இறந்ததை உறுதி செய்துகொண்ட அற்புதராஜ் சந்தைக்கு கிளம்பினார், பின்னர் மாமியாருக்கு கைப்பேசியில் அழைத்து,த்தனை முறை போன் செய்தாலும் சக்தி எடுக்கவில்லை, வீட்டுக்கு போய் பாருங்கள் என ஒன்றும் தெரியாதது போல கூறியுள்ளார், சக்தியின் தாய் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சக்தி சடலமாக கிடந்தார், மகள் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு கதறி அழுதார், பின்னர் விருதாச்சலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கணவன் அற்புதராஜ்ஜை பிடித்து விசாரித்தனர்.

பின்னர் உடலை பிரோதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,கணவன் அற்புதராஜ்ஜிடம் போலீஸ் பாணியில்  நடத்திய விசாரணையில், அவர் உண்மைகளை கக்கினார், வளைகாப்பு நடத்த வேண்டும் என சக்தி தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்,  இதனால் மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன், ஜல்லி கரண்டியால் மனைவி சக்தியை பலதாக தாக்கினேன், அதில் அவர் மயங்கி விழுந்தார், அப்போதும் ஆத்திரத்தை அடக்க முடியாமல் அவரின் கழுத்தில் பலமாக கைகளால் குத்தி கொலை செய்தேன்,  மனைவி இறந்து விட்டார் என்பதை தெரிந்துகொள்ள மூன்று முறை வீட்டிற்கு வந்து பார்த்தேன், சக்தி சடலமாகி விட்டார் என்பதை உறுதி செய்து கொண்டேன்.

பின்னர் மாமியாரிடம் சக்தி போன் எடுக்கவில்லை என தகவல் தெரிவித்து வீட்டிற்கு போய் பார்க்கும் படி கூறினேன், பிறகு நானும் எதுவும் தெரியாதது போல வீட்டிற்கு வந்து மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதேன் என அவர் வாக்குமூலம் அளித்தார், இதைக்கேட்டு அதிர்ந்த போலீஸ், அற்புதராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கர்ப்பிணி மனைவி வளைகாப்பு செய்ய செல்லி கேட்டார் என்பதற்காக கணவனே அவரை அடித்து கொலை செய்துள்ள இந்த கொடூரம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  
 

click me!