மனைவியின் படுக்கையறை அந்தரங்க வீடியோ, நிர்வாண போட்டோவை பார்த்து அதிர்ச்சியான வெளிநாட்டு கணவன்... வீட்டிலிருந்தே வெளியான ஷாக்!!

By sathish kFirst Published Sep 28, 2019, 11:04 AM IST
Highlights

படுக்கை அறையில் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் டி.வி.யில் பதிவான மனைவியின் அந்தரங்க வீடியோவை வெளிநாட்டில் இருக்கும் கணவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

படுக்கை அறையில் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் டி.வி.யில் பதிவான மனைவியின் அந்தரங்க வீடியோவை வெளிநாட்டில் இருக்கும் கணவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த திருமணமான வாலிபர் நீரவ் வேலைக்காக வெளிநாட்டில் வசித்து வருகிறார். அந்த வாலிபரின் கம்ப்யூட்டரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில படங்கள் மற்றும் வீடியோ பதிவாகி இருந்தன. அதை டவுண்லோடு செய்து பார்த்த வாலிபர் ஷாக் ஆகியுள்ளார்.

அந்த வீடியோக்களில் மனைவியின் அந்தரங்க காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் மனைவி படுக்கை அறையில் உடை மாற்றும் வீடியோ  காணப்பட்டன. மனைவியின் ஆபாச படங்களை பார்த்து அதிர்ந்து போன கணவன் இதுபற்றி மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், தனக்கு எதுவும் தெரியாது என்றும், படுக்கை அறை காட்சிகளை யாரோ ரகசியமாக வீடியோ எடுத்திருக்கலாம் என்றும் கூறினார்.

இதுபற்றி அந்த வாலிபர், வெளிநாட்டில் இருந்தபடியே கேரள சைபர் கிரைம்  போலீசுக்கு, எப்படியாவது மனைவியின் ஆபாச போட்டோ மற்றும் வீடியோக்களை வலைத்தளத்தில் இருந்து அகற்ற வேண்டும், அதனை ரகசியமாக படம் பிடித்தவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்றும் புகாரில் கூறி இருந்தார்.

இச்சம்பவம் பற்றி கேரள சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரித்ததில் அந்த பெண்ணின் போட்டோ மற்றும் வீடியோ எப்படி யாரால் எடுக்கப்பட்டது? எங்கிருந்து பரப்பப்பட்டது என்பதை கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் ஆராய்ந்து பார்த்தனர். இதில்,  அந்த வாலிபரின் வீட்டில் இருந்தே பரவி இருப்பது தெரிய வந்தது. சைபர் கிரைம் போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில், அங்கு பெண்ணின் படுக்கை அறையில் ஸ்மார்ட் டி.வி. பொருத்தப்பட்டிருந்தது. இந்த ஸ்மார்ட் டி.வி.யில் இருந்து தினமும் கணவருடன் ஸ்கைப்பில் சேட்டிங் செய்வேன் என அந்த பெண் கூறினார்.

சைபர் கிரைம் வல்லுனர்கள் ஸ்மார்ட் டி.வி.யை பரிசோதித்து பார்த்ததில் கேமிரா ஆன்லைனில் இருந்தது தெரிந்தது. அந்த பெண் இரவு நேரத்தில் கணவருடன் ஸ்கைப்பில் பேசிய பின்பு ஸ்மார்ட் டி.வி.யின் கேமிராவை ஆப் செய்யாமல் இருந்துள்ளார். அது தொடர்ந்து செயல்பாட்டில் இருந்ததால், கேமரா ஆன் ஆகியிருப்பது தெரியாமல் ஸ்மார்ட் டி.வி. முன்பே, குளித்துவிட்டு வந்து  அந்த பெண் உடை மாற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இந்த காட்சிகள் ஸ்மார்ட் டி.வி. கேமிராவில் பதிவாகி அப்படியே வெளிநாட்டில் இருக்கும் கணவரின் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் டவுண்லோடு ஆகியுள்ளது. இந்த காட்சிகளைதான் கணவர் பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். சைபர் கிரைம் போலீசார் மற்றும் கம்ப்யூட்டர் நிபுணர்கள் இதனை கண்டு பிடித்து அந்த பெண்ணிடம் நடந்த தவறை எடுத்துக் சொல்லியுள்ளார். மேலும் டி.வி.யில் ஸ்கைப் பயன்படுத்திய பின்பு அதை எப்படி நிறுத்த வேண்டும் என்பதை தெளிவாக சொல்லி கொடுத்துள்ளார்.

click me!