எம்.பி- எம்.எல்.ஏ.,க்களுக்கு 24- கல்லூரி மாணவிகள் 40 பெண்களை இரையாக்கி வீடியோ... கும்பல் தலைவி குபீர் வாக்குமூலம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 27, 2019, 6:32 PM IST
Highlights

மத்தியபிரதேசத்தில் அரசியல்வாதிகள், உயரதிகாரிகளான விஐபிகளுக்கு 24-க்கும் மேற்பட்ட கல்லூரி பெண்களை இரையாக்கியதாக கும்பல் தலைவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். 
 

அரசியல்வாதிகள், உயரதிகாரிகளை குறி வைத்து பாலியல் ரீதியாக அணுகிய பெண்கள் கும்பலிடம் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் பாலியல் ரீதியில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக மாநகராட்சி ஊழியர் ஒருவர், பெண் மீது புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பான விசாரணையின் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பணம் படைத்தவர்களின் உல்லாச தேவைகளுக்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை அனுப்பி வைத்த கும்பல் ஒன்று, அவர்களின் பாலியல் வீடியோக்களை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது.

இந்தக் கும்பலைச் சேர்ந்த 5 பெண்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஓட்டுநர் ஒருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்களிடமிருந்து கணினி, லேப்டாப்புகள் மற்றும் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பலுக்கு தலைவியாக இருந்த ஸ்வேதா ஜெயின் சிறப்பு விசாரணைக்குழுவிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார். 

அதில், ‘’கல்லூரி செல்லும் வறுமை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த 24 இளம் பெண்களை மத்திய பிரதேச அரசின் உயர்ந்த மற்றும் வலிமைமிக்கவர்களை கவர்ந்திழுத்தேன். பல கல்லூரி பெண்களை அவர்களது தந்தை வயதில்  உள்ள அதிகாரிகளுக்கு இரையாக்கினேன். இதன் முக்கிய நோக்கம் பணம் மட்டுமல்ல. இலக்கு வைக்கப்பட்ட வி.ஐ.பிகளிடமிருந்து நூறு கோடியில் இலாபகரமான அரசாங்க ஒப்பந்தங்களை வாங்கிவே இப்படி செய்தேன். கமிஷன் அடிப்படையில் நானும் எனது உதவியாளர் ஆர்த்தி தயாலும் புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு பெரும்பாலான ஒப்பந்தங்களை பெற்றேன். 

ஒப்பந்தங்களை வாங்குவதைத் தவிர, பல ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி வாங்கித் தந்துள்ளேன்.  எங்கள் வலையில் சிக்கும் இளம் பெண்களுக்கு முதலில் ஐந்து நட்சத்திர கலாச்சாரத்தின் கவர்ச்சி மற்றும் ஆடம்பரங்களின் சுவையை காட்டுவேன். பின்னர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்துடன் இருக்க பெரும் தொகைகளை கொடுப்பேன்.

கல்லூரிக்குச் செல்லும் இளம்பெண்களை தவிர,  வாடிக்கையாளர்களைப் பூர்த்தி செய்வதற்காக 40 க்கும் மேற்பட்ட  விபசார அழகிகளையும் வைத்திருந்தேன்’’ என வாக்குமூலம் அளித்துள்ளார். 

click me!