ஓவர் நடிப்பு உடம்புக்கு ஆகாது.. கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவி.. போலீசில் வசமாக சிக்கியது எப்படி?

Published : Nov 25, 2022, 10:18 AM ISTUpdated : Nov 25, 2022, 10:23 AM IST
ஓவர் நடிப்பு உடம்புக்கு ஆகாது.. கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவி.. போலீசில் வசமாக சிக்கியது எப்படி?

சுருக்கம்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்று விட்டு ஒவராக நாடகமாடியதால் மனைவி போலீசில் வசமாக சிக்கினார். 

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்று விட்டு ஒவராக நாடகமாடியதால் மனைவி போலீசில் வசமாக சிக்கினார். 

மதுரை திருப்பாலை பிவிகேஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(35). இவர் வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வைஷ்ணவி(24). இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வெளிநாட்டில் இருக்கும் செந்தில்குமார் ஆண்டுக்கு இருமுறை குடும்பத்தை பார்க்க சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 27ம் தேதி குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, ஹெல்மட் அணிந்து வந்த மர்ம நபர்கள் செந்தில்குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செந்தில்குமாரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க;- 13 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக சீரழித்த 62 வயது கோயில் பூசாரி.. சரியான ஆப்பு வைத்த போக்சோ சிறப்பு நீதிமன்றம்.!

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி, தனது கணவர் மீதான தாக்குதல் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதில் வைஷ்ணவி ஒருவரிடம் பல மணி நேரம் பேசியது தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது கணவனை கொலை செய்ய கூலிப்படை ஏவியதை ஒப்புக்கொண்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் மனைவி வைஷ்ணவி அளித்த வாக்குமூலத்தில்;- திருமணத்திற்கு முன்பே மாமா மகன் வெங்கடேசனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வைஷ்ணவிக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர். கணவர் செந்தில்குமார் வெளிநாட்டுக்கு சென்றதால் மாமா மகன் வெங்கடேசன் உடனான காதலை மீண்டும் தொடர்ந்துள்ளார். அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த மாதம் செப்டம்பர் மாதம் ஊர் திரும்பிய கணவர் செந்தில்குமார் இனி குடும்பத்துடன் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதனை வைஷ்ணவி அதிர்ந்து அடைந்துள்ளார். இததனால், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் கணவரை கொலை செய்ய நானும், கள்ளக்காதலனும் சேர்ந்து  திட்டமிட்டு கூலிப்படையை ஏவினோம் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வைஷ்ணவி, அவரது கள்ளக்காதலன் வெங்கடேசன், கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க;-  உல்லாசமாக இருக்க வீட்டுக்கு வந்த போது கள்ளக்காதலி வேறு ஒருவருடன் நெருக்கம்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை