தாய் வேறொருவருடன் ஓட்டம்.. சகோதரியின் கை கால்களை கட்டி வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த காமக்கொடூர அண்ணன்..!

By vinoth kumarFirst Published Mar 1, 2020, 4:48 PM IST
Highlights

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி இவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதில், எனது தந்தையும் தாயும் குடும்பத்தகராறு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்டனர் எனக்கு 15 வயதில் சகோதரன் இருக்கிறான். என் தாய் வேறொருவருடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் குடும்பம் நடத்தி வருகிறார்.

வில்லிவாக்கத்தில் சகோதரியின் கை கால்களை கட்டி வைத்து பாலியல் தொல்லை கொடுத்த கொடூர சகோதரனை போலீசார் கோச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி இவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதில், எனது தந்தையும் தாயும் குடும்பத்தகராறு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்டனர் எனக்கு 15 வயதில் சகோதரன் இருக்கிறான். என் தாய் வேறொருவருடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் குடும்பம் நடத்தி வருகிறார்.

இதனால் எங்கள் வீட்டில் நானும் சகோதரனும் வசித்து வந்தோம். கடந்த சில மாதங்களாக கை, கால்களை கட்டி போட்டு சகோதரன் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்தார். அவரிடம் இருந்து தப்பித்து வந்துள்ளேன். எனவே சகோதரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதையும் படிங்க;- ஆசை வார்த்தை கூறி இரவு முழுவதும் ரூம் போட்டு உல்லாசம்.. திருமணம் செய்ய மறுத்த வாலிபரை அலேக்கா தூக்கிய போலீஸ்

அதனால், அப்பகுதியில் தலைமறைவாக இருந்த சிறுமியின் சகோதரனை நேற்று மாலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சகோதரியை கட்டி வைத்து பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இவர் மீது போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கெல்லீசில் உள்ள அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். 

click me!