’நண்பனின் நண்பனும் நண்பனே’ என்பது சினிமா வசனத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில்...? முகநூல் நட்பின் மூலம் அறிமுகமான நண்பரை நம்பி பிறந்தநாள் பார்ட்டிக்குச் சென்ற தமிழக மாணவிக்கு மதுபானத்தைக்கொடுத்துக் கற்பழித்த நண்பரின் நண்பர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
’நண்பனின் நண்பனும் நண்பனே’ என்பது சினிமா வசனத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில்...? முகநூல் நட்பின் மூலம் அறிமுகமான நண்பரை நம்பி பிறந்தநாள் பார்ட்டிக்குச் சென்ற தமிழக மாணவிக்கு மதுபானத்தைக்கொடுத்துக் கற்பழித்த நண்பரின் நண்பர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து எச்ஏஎல் காவல் நிலையத்தில் ஆதித்யாவின் மீது மாணவி புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு உண்மையைக் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து ஆதித்யா கைது செய்யப்பட்டார்.
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலைச் சேர்ந்த ஆதித்யா, மரத்தஹள்ளியில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆரிஃப் மற்றும் ஆதித்யாவின் தொடர்ச்சியான வேண்டுகோள்களை அடுத்து புகாரைத் திரும்பப் பெற முடிவெடுத்தார் மாணவி. ஆனால் காவல்துறை அவரின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டது. ஆதித்யா தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
இந்தக் காலத்தில் ஒரிஜினல் நண்பர்களையே நம்ப முடியாதபோது முகநூல் நண்பர், அந்த நண்பரின் நண்பர்களையெல்லாம் நம்பி பார்ட்டிக்குப் போனால் இதுதான் கதி.