வீடு புகுந்து ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு... பட்டப்பகலில் துடிக்கத் துடிக்க கொடூரம்!

By Thiraviaraj RMFirst Published Jan 24, 2019, 5:32 PM IST
Highlights

சென்னையில் நடுப்பகலில் வீடு புகுந்து ஆசிரியை மற்றும் அவரது கணவரை அரிவாளால் மர்ம நபர்கள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

சென்னையில் நடுப்பகலில் வீடு புகுந்து ஆசிரியை மற்றும் அவரது கணவரை அரிவாளால் மர்ம நபர்கள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை, ராயப்பேட்டை ஐஸ்ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஐஸ்ஹவுஸ் பகுதில் உள்ள அவர்களது வீட்டில் விஜயலட்சுமி அவரது கணவர் சரவாணனுடன் இருந்துள்ளார். அப்போது வீடு புகுந்த மர்ம நபர்கள் சரவணனையும், விஜயலட்சுமியையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய விஜயலட்சுமியையும், சரவணனையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையறிந்த ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அரிவாளால் வெட்டி சென்ற சம்பவம் எதனால் நடந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.  

click me!