ஜீன்ஸ் போட்ட பெண்ணுடன் படுக்கை அறையில் மாஜி அமைச்சர்.. 68 வயதில் அசிங்கம், இழுத்துப் போட்டு அடிக்கும் மனைவி.

By Ezhilarasan BabuFirst Published Jun 4, 2022, 5:01 PM IST
Highlights

படுக்கை அறையில் இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்த குஜராத் மாநில காங்கிரஸ் முன்னாள் அமைச்சரை அவரது மனைவி தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது 

படுக்கை அறையில் இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்த குஜராத் மாநில காங்கிரஸ் முன்னாள் அமைச்சரை அவரது மனைவி தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அவருடன் இருந்த பெண்டையும் அடித்து உதைப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. பல மாநிலங்களில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்து வருகிறது. அக்காட்சியில் உள்ள தலைவர்கள் மீது மக்களுக்கு நன்மதிப்பு குறைந்து விட்டதே இந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகவும் உள்ளது. இந்நிலையில் குஜராத் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பரத் சிங் சோலங்கி இளம்பெண்ணுடன் படுக்கை அறையில் தனிமையில் இருந்து, பின்னர் அவரது மனைவியால் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மத்திய முன்னாள் அமைச்சரும் குஜராத் காங்கிரஸின் மூத்த தலைவருமானவர் பரத் சிங் சோலங்கி(68) சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சில மாதங்கள் தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கப் போவதாகவும், அந்த ஓய்வு நாட்களில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையின மக்களை சந்திக்க போவதாகவும், இது தனது சொந்த முடிவு என்றும், இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில் பரத் சிங் அவரது மனைவி ரேஷ்மா பட்டேல் இடையே கருத்து வேறுபாடு காரணமாக  விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதன் மீதான விசாரணை ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில்  அது குறித்து தெரிவித்துள்ள பரத் சிங் சோலங்கி பல ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக வாழவில்லை, எனது சொத்தை அபகரிக்கும் நோக்கத்திலேயே எனக்கு மனைவி செயல்பட்டு வருகிறார் என மனைவி மீது சரமாரியாக குற்றம் சாட்டினார் . இந்நிலையில் பரத் சிங் சிங் சோலங்கி இளம் பெண் ஒருவருடன் படுக்கை அறையில் இருப்பது போன்றும் அப்போது அவரது மனைவி ரேஷ்மா பாட்டில் வீட்டிற்குள் நுழைந்து கணவர் பரத் சிங்கையும் அந்தப் பெண்ணையும் தாக்குவது போன்றும் வீடியோ இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பரத் அரைக்கால் டவுசர் அணிந்தபடி உள்ளதும், மனைவி அவரின் சட்டையை பிடித்து உலுக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. அதே நேரத்தில்  அந்தப் இளம் பெண்ணையும் சரமாரியாக தாக்கும் வீடியோ தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ளார் பரத் சிங் மனைவி ரேஷ்மா பட்டேல் தனது அரசியல் எதிரிகளுடன் கைகோர்த்துக்கொண்டு எனக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் இது போன்ற விரும்பத்தகாத செயல்களில் என் மனைவி ஈடுபட்டு வருகிறார் என்றும் விமர்சித்துள்ளார். என்னுடைய இமேஜை குலைக்க ரேஷ்மா இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும் என்னோடு இருக்கும் பெண்ணை தான் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். 
 

click me!