
சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு செய்த போது ரத்த போக்கு ஏற்பட்டு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இரு பெண்கள் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருக்கலைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மனைவி செல்வி (30). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், செல்வி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். 5 மாத கர்ப்பமாக இருந்த செல்வி தனது கரப்பத்தை கலைத்துவிட முடிவு செய்து தனியார் மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெற்றுள்ளார். அங்க சிகிச்சை தொகை அதிகமாக கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் செல்வி அப்பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வரும் மணிகண்டன் மனைவி முத்துக்குமாரி (40) என்பவரிடம் கருக்கலைப்பு செய்வதற்காக சென்றுள்ளார்.
அதிக ரத்தப்போக்கு
அப்போது மெடிக்கல் வைத்து நடத்தி வரும் முத்துக்குமாரி தனது வீட்டு மாடியில் வைத்து செவிலியர் கவிதா (38) என்வரின் உதவியோடு செல்விக்கு கருகலைப்பு செய்துள்ளனர். அப்போது, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செல்வியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து, செல்விக்கு கருக்கலைப்பு செய்த மெடிக்கல் உரிமையாளர் முத்துக்குமாரி மற்றும் செவிலியர் கவிதா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
குண்டாஸ்
வரும் காலங்களில் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இவர்கள் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் சிறையில் அடைக்க ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து, வேலூர் சிறையில் இருவரையும் அடைத்தனர்.