யூடியூப் பிரபலத்தின் மகன் திடீர் தலைமறைவு..மதுபோதையில் பிரச்சனையில் ஈடுப்பட்டதால் சிக்கல்…

Published : Nov 22, 2021, 10:52 PM IST
யூடியூப் பிரபலத்தின் மகன் திடீர் தலைமறைவு..மதுபோதையில் பிரச்சனையில் ஈடுப்பட்டதால் சிக்கல்…

சுருக்கம்

புதுச்சேரியில் மது போதையில் உணவகத்தில் தகராறில் ஈடுப்பட்ட பிரபல யூடியூப் சமையல் கலைஞரின் மகனை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவரின் உறவினர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

டாடி ஆறுமுகம் யூடியூப் யில் மிகவும் பிரபலமானவர். இவரையும், இவரது சமையலையும் தெரியாவதர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு வலையொளியில் இவரது வீடியோக்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சிக்கன், மட்டன் என்ற விதவிதமான உணவுவகைகள் கிராமத்து பாரம்பரிய முறையில் செய்து அசத்தியும் வருகிறார். இவரது village Food factory எனும் சேனலை கிட்டத்தட்ட 4 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.  

இந்நிலையில் புதுச்சேரியில் ஒரு ஓட்டலில் மதுபோதையில் டாடி ஆறுமுகத்தின் மகன் , இவரது சித்தப்பா மகன் , நண்பர்கள் , உணவகத்தின் ஊழியர்களின் தகராறில் ஈடுப்பட்டுள்ளனர்.  இதில் உணவகத்தின் பொருட்களை சேதப்படுத்தி, தாக்குதலும் நடத்தியுள்ளனர். 

இது குறித்து உணவக ஊழியர் அளித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.மேலும் கோபிநாத்துடன் மது அருந்தி ஊழியர்களுடன் தகராறில் ஈடுப்பட்ட இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத்தை தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!