நடத்தையில் தீராத சந்தேகம்! தாலி கட்டிய மனைவி கல்லால் அடித்து கொலை! இறுதியில் கணவர் என்ன செய்தார் தெரியுமா?

By vinoth kumarFirst Published Apr 20, 2024, 11:58 AM IST
Highlights

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தை அடுத்துள்ள தித்திகி கிராமத்தைச் சேர்ந்தவர் பீமன்னா. இவருக்கு கவிதா(26) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. 

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட கணவர் அவரை கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தை அடுத்துள்ள தித்திகி கிராமத்தைச் சேர்ந்தவர் பீமன்னா. இவருக்கு கவிதா(26) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், திடீரென மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வழக்கம் போல மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பீமன்னா தனது மனைவி கவிதாவை கல்லால் அடித்துக் துடிதுடிக்க கொலை செய்துள்ளார். பின்னர் போலீசுக்கு பயந்து பீமன்னாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தூக்கில் தொங்கிய பீமன்னா உடலை இறக்கினர். இதனையடுத்து அவரதுது வீட்டிற்கு சென்று பார்த்த போது கவிதா ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார்  இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!