காங்கிரஸ் நிர்வாகி வெட்டிக்கொலை.... சென்னையில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

Published : Sep 14, 2022, 10:18 PM IST
காங்கிரஸ் நிர்வாகி வெட்டிக்கொலை.... சென்னையில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

சுருக்கம்

சென்னை அருகே காங்கிரஸ் நிரவாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அருகே காங்கிரஸ் நிரவாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 7 ஆவது தெருவை சேர்ந்தவர் கார்த்திக். 30 வயதான இவர் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார். மேலும் இவர் பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர் மது அருந்தி கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: மனைவியின் கிட்னியை விற்று கணவன் 2வது கல்யாணம்... 4 ஆண்டுகள் கழித்து உண்மை தெரிந்து கதறிய கொடுமை.

அப்போது நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையில் கார்த்திக் உடன் மது குடித்துக் கொண்டிருந்த ஐந்து பேர் கார்த்திக்கை சரமாரியாக வெட்டினர். இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுக்குறித்து தகவறிந்து வந்த காவல்துறையினர், கார்த்திக்கின் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: பாலியல் உறவுக்கு அழைத்த திருநங்கைகள்.. இளைஞருக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி - பரபரப்பு சம்பவம்

அதில், இரண்டு மாதத்திற்கு முன்பு பிரபல ரவுடியான காட்டான் மோகன் என்பவருடன் சேர்ந்து கார்த்திக் மது அருந்தியதாகவும் அப்போது கார்த்திக் காட்டான் மோகனை அடித்ததாகவும் அந்த முன் விரோதத்தில் காட்டான் மோகனின் மகன் மாதவன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றியதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாதவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!