பட்டப்பகலில் கல்லூரி மாணவர் படுகொலை... தூத்துக்குடியில் 3 மாதங்களில் 20 சம்பவங்கள்... பீதியில் பொதுமக்கள்..!

By vinoth kumarFirst Published Sep 23, 2019, 5:27 PM IST
Highlights

தூத்துக்குடியில் பட்டப்பகலில் கல்லூரி அருகே மாணவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 20 பேர் கொலை அரங்கேறி உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

தூத்துக்குடியில் பட்டப்பகலில் கல்லூரி அருகே மாணவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 20 பேர் கொலை அரங்கேறி உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் சந்தையடியூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் அபிமன்யூ, செய்துங்கநல்லூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற அபிமன்யூ, மதியஉணவு இடைவேளையின்போது, சாப்பிடுவதற்காக வெளியே வந்துள்ளார். 

அப்போது, 4 இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம கும்பல், கல்லூரி அருகிலேயே அபிமன்யூவை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து தலை, கழுத்தில் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அபிமன்யூ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!