7 வயது சிறுமியை துடிக்க துடிக்க பாலியல் வன்புணர்வு செய்த மிருகம்! பெற்றோர் அலட்சியத்தால் நடந்த கொடூரம்!

By manimegalai aFirst Published Dec 2, 2018, 5:46 PM IST
Highlights

புதுச்சேரியில் 7 வயது சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி போகும் வழியில் அந்த சிறுமியை துடிக்க துடிக்க வன்புணர்வு செய்துள்ள மனித மிருகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியில் 7 வயது சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி போகும் வழியில் அந்த சிறுமியை துடிக்க துடிக்க வன்புணர்வு செய்துள்ள மனித மிருகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

புதுச்சேரி அடுத்த ஆரோவில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர், வேலைக்கு நேரம் ஆகி விட்டதால், அதே பகுதியில் வசிக்கும் ஐயப்பன் ராஜ் என்பவரிடம் ஒரு நாள் மட்டும் தன்னுடைய மகளை பள்ளியில் அழைத்து சென்று விடுமாறு கூறியுள்ளார். 

அதன் படி 7 வயதாவும் இந்த சிறுமியை அய்யப்பன் ராஜ் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். ஆனால் நேரடியாக சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்லாமல், பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு காட்டு பகுதிக்கு கொண்டு சென்று சிறுமியிடம் அத்துமீறி அவரை துடிக்க துடிக்க பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். வலி தாங்க முடியாமல் அந்த சிறுமி அழவே, அவரை பள்ளியில் விட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டுள்ளார். பின் இந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி பள்ளி ஆசிரியை உடனடியாக அவருடைய பெற்றோரிடம் தெரிவித்ததும், சிறுமியின் பெற்றோர் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் 21 வயதாகும் ஐயப்பன் ராஜை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் தொடர்ந்து நாவற்குளம் பகுதியில் சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் சம்பவம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

click me!