டியூசன் படிக்க வந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷம்... கணவனுடன் சேர்ந்து மாட்டிக்கொண்ட ஆசிரியை..!

By vinoth kumarFirst Published Jan 18, 2020, 5:09 PM IST
Highlights

சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ். ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி முடிந்து மாலை வீட்டிற்கு வந்ததும், அருகில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்தும் வருகிறார். இவரிடம் வீட்டின் அருகில் வசிக்கும் 6 வயது சிறுமி ஒருவர் டியூசன் படித்து வருகிறார்.

டியூசன் படிக்க வந்த 6 வயது சிறுமியிடம் ஆசிரியையின் கணவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ். ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி முடிந்து மாலை வீட்டிற்கு வந்ததும், அருகில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்தும் வருகிறார். இவரிடம் வீட்டின் அருகில் வசிக்கும் 6 வயது சிறுமி ஒருவர் டியூசன் படித்து வருகிறார்.

இந்நிலையில், குடிபோதையில் வீட்டில் இருந்த நரேஷ் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால், பயந்து போன சிறுமி கதறி அழுதுள்ளார். உடனே தங்கையின் அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுமியின் சகோதரனிடம் நடந்த சம்பவங்களை சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து, நடந்தவற்றை பெற்றோரிடம் சிறுவன் கூறியுள்ளான். தங்களது குழந்தைக்கு நடந்த கொடூரத்தை எண்ணி பதறி போன அவர்கள், உடனடியாக ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதற்கு உடந்தையாக அவரது மனைவி விஜயலட்சுமி இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே புகார் குறித்து அறிந்ததும் நரேஷ், தனது மனைவியுடன் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில், பூந்தமல்லி அருகே உறவினர் வீட்டில்ட பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே தி.நகரில் உள்ள டியூசன் சென்டரில் பள்ளி மாணவிகளை காதலனுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!