கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருப்பதற்காக தாலி கட்டிய கணவரை கொடூரமாக கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருப்பதற்காக தாலி கட்டிய கணவரை கொடூரமாக கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா தொட்டஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் (32). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ரோகிணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், பிரதீப் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது மனைவி ரோகிணி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனையடுத்து, மனைவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குடிக்கு அடிமையான பிரதீப் அடிக்கடி மது போதையில் வந்து ரோகிணியுடன் தகராறு செய்து அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனிடையே, பிரதீப்பின் நண்பர் சீனிவாசன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
இதனால், ரோகிணிக்கும் சீனிவாசன் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். காலபோக்கில் இந்த விவகாரம் கணவர் பிரதீப்புக்கு தெரியவர இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், இவர்களது காதல் தொடர்ந்தது. கணவர் பிரதீப்பை உயிருடன் விட்டால் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது. ஆகையால், குடிபோதையில் இருந்த கணவர் பிரதீப்பை இருவரும் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். குழந்தைகள் அப்பா எங்கே கேட்டபோது தூங்குவதாக கூறி குழந்தைகளையும் தூங்கவைத்துள்ளார்.
பின்னர், கணவனை கொலை செய்த அச்சம் கூட இல்லாமல் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அதன் பின்னர் தனது கணவர் குடிபோதையில் இறந்துவிட்டதாக கூறி ரோகிணி நாடகமாடியுள்ளார். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் பிரதீப்பை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.