சென்னையில் பயங்கரம்... ரவுடியை வெட்டிக்கொன்று மூளையை தட்டில் வைத்து சென்ற கும்பல்..!

By vinoth kumarFirst Published Sep 20, 2019, 12:04 PM IST
Highlights

சென்னை திருவல்லிக்கேணியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை வெட்டிக்கொலை செய்து மூளையை தனியாக எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை வெட்டிக்கொலை செய்து மூளையை தனியாக எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லிக்கேணி பாரதி சாலை மாட்டான்குப்பம் கெனால் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அறிவழகன் (24). இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. மேலும்,  ரவுடி பல்புகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் அறிவழகன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் மாட்டான்குப்பத்தில் உள்ள தனது வீட்டில் அறிவழகன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் அருகில் உள்ள வேறு வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, அறிவழகன் வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் 2 பேர் நுழைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அறிவழகன் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். 

ஆனால், 2 பேரும் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அறிவழகனின் தலை, முகம், கை, கால்களில் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது.  இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அறிவழகன் மூளையை தனியாக எடுத்து தட்டில் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அறிவழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் அறிவழகனுக்கும் சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அறிவழகன் அந்த பெண்ணின் ஆடையை கிழித்துவிட்டதன் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது முன்விரோதம் காரணமா கொலை நடைபெற்றதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி அறிவழகன் கொலை காரணமாக மாட்டாங்குப்பம் பகுதியில் பரபரப்பு நிலவு வருகிறது. 

click me!