பாலியல் துன்புறுத்தி மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் கொலை... குற்றவாளிக்கு மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

By vinoth kumarFirst Published Feb 18, 2021, 3:32 PM IST
Highlights

புதுக்கோட்டை அருகே சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

புதுக்கோட்டை அருகே சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வடமாநிலத்தை சேர்ந்த டேனிஷ் படேல் என்ற நபர் கடந்த 2019-ம் ஆண்டு மனநலம் குன்றிய சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்தார். இது தொடர்பாக போலீசார் குஜராத்தை சேர்ந்த டேனிஷ் படேல் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதில், மனநலம் குன்றிய சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் டேனீஷ் படேலுக்கு 3 பிரிவுகளின் கீழ் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.  

click me!