இன்டர்நெட்டில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் போடுவேன் என மிரட்டினால் என்ன செய்வது? பெண்களே படிங்க...

By sathish kFirst Published Mar 15, 2019, 2:25 PM IST
Highlights

சமூக வலைத்தளங்களில் நட்பு பழகி தங்களது வாழ்க்கையை சீரழித்துக் கொண்ட பெண்களை போல யாரும் சிக்காமல் தங்களை காத்துக் கொள்வது எப்படி?  இது தொடர்பாக பெண்ணுரிமை செயற்பாட்டாளர் எழுத்தாளர் பத்மாவதி BBC தமிழ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. நெருக்கத்தைக் கூட்டுவதற்குமான கருவியாக செல்போன் பேச்சு, ஃபேஸ்புக் - வாட்ஸப் சாட்களைப் பயன்படுத்தி பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்வோர், வீட்டைக் கவனிக்கும் பெண்கள் எனப் பல தரப்பினரையும்  டார்கெட்டாக்கி   வளைத்து போட்டுள்ளனர்.

அப்படி வலையில் சிக்கிய பெண்களை குறிப்பிட்ட இடத்துக்கு  வரவழைத்துதான் கொடூரங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். வீடியோ எடுத்து, மிரட்டிப் பணம் பறிப்பதுதான் இவர்களின் முக்கிய நோக்கம். வசதி படைத்த பெண்களிடம் ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என மிரட்டிப் பணம் பறிப்பதும். ஏழைப் பெண்களிடம் வீடியோவை வெளியிடுவோம் என மிரட்டி, அவர்களைப் பணத்துக்காக வெவ்வேறு முக்கிய புள்ளிகளின் கட்டிலுக்கு விருந்தாக்குவது  என இந்த செக்ஸ் மாஃபியா கும்பல் செய்து வந்துள்ளது. இதில், பாதிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்ட பெண்களில் அந்தச் சுற்றுவட்டாரத்தைத் தாண்டிய பெண்களும், ஃபேஸ்புக் மூலம்  அறிமுகமாகி வலைக்குள் சிக்கி சீரழிந்துள்ளனர்.

இப்படி சமூக வலைத்தளங்களில் நட்பு பழகி தங்களது வாழ்க்கையை சீரழித்துக் கொண்ட பெண்களை போல யாரும் சிக்காமல் தங்களை காத்துக் கொள்வது எப்படி?  இது தொடர்பாக பெண்ணுரிமை செயற்பாட்டாளர் எழுத்தாளர் பத்மாவதி BBC தமிழ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்  ஒரு ஆணோடு பாலியல் ரீதியாக உரையாடியிருந்து, அதைத் தவறு என்று  உணரும் தருணத்தில் அதிலிருந்து முழுமையாக விலகி விடலாம்.

ஆனால், பெண்கள் அதற்குப் பின்தான் பெரிய தவறு செய்கின்றனர். இந்தக் குறுஞ்செய்திகள் அல்லது அலைபேசி உரையாடல்களை வைத்து ஆண்கள் மிரட்டும் பொழுது அதற்கு பயந்து அவர்கள் அழைக்கும் இடத்திற்குச் செல்வது, அவர்கள் என்ன சொன்னாலும் செய்வது என்ற நிலைக்குச் சென்று விடுகின்றனர்.

பாலியல் மிரட்டல்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. எந்தச் சூழலிலும் பதட்டமடையத் தேவையில்லை.

முகநூல், யு டியூப், கூகுள் ஆகியவற்றில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தவறாகப் பதிவிட்டு இருந்தால் அதை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கின்றன. IMAGE REMOVAL PREOCESSING மூலமாக ஆபாசமாகப் பதிவிட்டுள்ள புகைப்படங்களை நீக்கி விட முடியும்.

கூகுள் வலைத்தளத்தில் REVERSE IMAGE PROCESSER பயன்படுத்தி எந்தெந்த வலைப்பகுதிகளில் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது என்பதனை அறிந்து அதை நீக்கி விட இயலும்.

யூ ட்யூப் -ல் காப்பி ரைட் படிவத்தினை சமர்ப்பித்தால் வீடியோ அகற்றப்படும்.  XXX வீடியோஸ் என்று சொல்லக் கூடிய 
ஆபாச வலைத்தளத்தில் ABUSE REPORTING FORM என்று ஒரு படிவம் உள்ளது.அந்தப் படிவத்தில் , இது என்னுடைய அனுமதி இல்லாமல்  என்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பதிவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தால் அந்தக் காணொளியை நீக்கி விடுவார்கள். இதனைத் தனியாக செய்யத் தெரியவில்லை என்றால் , அதற்கென்று சைபர் கிரைம் பிரிவு உள்ளது அல்லது இதை செய்து கொடுக்க தனியார் ஏஜன்சிகள் இருக்கின்றன.

உடலை வெளிப்படுத்துவதால் நமது புனிதம் கெட்டுவிட்டது, கற்பு போய்விட்டது என்றெல்லாம் நினைத்துப் பதறாமல் ,பாலியல் அச்சறுத்தல்களுக்கு அடிபணியாமல் நிதானமாக இந்தச் சிக்கல்களில் இருந்து வெளியேறும் வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற மனநிலைக்கு சென்றுவிடக் கூடாது.

முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவற்றை பயன்படுத்தாதீர்கள் என்று சொல்லவில்லை. நண்பன், காதலன் போன்ற உறவுகள்  ஆன்லைனில் பெறக்கூடியது அல்ல. என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
 

click me!