நள்ளிரவில் காதலனை வரவழைத்த பள்ளி மாணவி... உல்லாச வெறியில் பெட்ரூமில் நடந்த படு பயங்கரம்!! பல்ஸை எகிறவிட்ட பெங்களூர் க்ரைம்...

By sathish kFirst Published Aug 21, 2019, 2:06 PM IST
Highlights

குளியலறையில் ஜவுளி வியாபாரி கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை கத்தியால் குத்தி கொன்று உடலை எரித்ததாக 15 வயது மகள், அவருடைய காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குளியலறையில் ஜவுளி வியாபாரி கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை கத்தியால் குத்தி கொன்று உடலை எரித்ததாக 15 வயது மகள், அவருடைய காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு ராஜாஜிநகர் 5-வது பிளாக், 17-வது கிராசில் வசித்து வந்த ஜெயக்குமார் மனைவி பூஜாதேவிக்கு 15 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகள் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஜெயக்குமார் ஜவுளி கடை வைத்துள்ளார். கடந்த 17-ந் தேதி ஜெயக்குமாரின் மனைவி பூஜாதேவி தனது மகனுடன் புதுச்சேரிக்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் ஜெயக்குமாரும், அவருடைய மகள் மட்டும் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் ஜெயக்குமாரின் வீட்டு குளியல் அறையிலிருந்து நாற்றம் கலந்த நிலையில் புகை வெளிவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குளியல் அறையில் பிடித்த தீயை அணைத்தனர். அங்கு ஜெயக்குமார் உடல் அரைகுறையாக உடல் கருகி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, விசாரணையை தொடங்கினர் ராஜாஜிநகர் போலீசார், அப்போது வீட்டை சோதனையிட்டதில் அவருடைய படுக்கை அறையில் ரத்த கறை இருந்தது. இதை வைத்து ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளதும், அவருடைய உடல் எரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 

இதற்கிடையே, மனைவி மகள் கல்யாணத்துக்கு சென்றுள்ள நிலையில் மகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவரை விசாரிக்க முயற்சித்தனர். அப்போது அவருடைய காலில் தீக்காயம் இருப்பதும், அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றதும் தெரியவந்தது. இதனால், போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே. உடனடியாக ஜெயக்குமாரின் மகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

இந்த விசாரணையின்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், ஜெயக்குமாரை தனது காதலன் பிரவீன்  என்பவருடன் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்து நாடகமாடியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து ஜெயக்குமாரின் மகளையும், அவருடைய காதலன் பிரவீனையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  ஜெயக்குமாரின் மகளும், ராஜாஜிநகர் 20-வது மெயின் ரோட்டில் வசித்து வரும் பி.யூ.சி. முதலாம் ஆண்டு மாணவருமான பிரவீனும் ஒரே பள்ளியில் படித்தனர். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் காதலித்தனர். இதனால் ஜெயக்குமார் வீட்டில் இல்லாத நேரத்தில் பிராவின் அடிக்கடி சென்று சித்ராவுடன் தனிமையில் இருந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரவீனும் சித்ராவும் பெட் ரூமில் இருந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் பிரவீனை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சித்ரா மனவுளைச்சலில் இருந்துள்ளார். 

மேலும், 2 பேரும் செல்போனில் பேசி வந்தனர். இதை ஜெயக்குமாரும், அவரது மனைவி பூஜா தேவியும் கண்டித்தனர். பிரவீனுடன் பேசக்கூடாது என்று அவர்கள் கூறியதோடு, செல்போனை பிடுங்கி வைத்தனர். இதனால் தந்தை ஜெயக்குமார், தாய் பூஜா தேவி மீது கடும் கோபமாக இருந்த சித்ரா ,கடந்த 17-ந் தேதி இரவு ஜெயக்குமாரின் மனைவி பூஜாதேவி தனது மகனுடன் புதுச்சேரிக்கு கல்யாணத்துக்கு  கிளம்பினார். இதனால் வீட்டில் ஜெயக்குமாரும், அவருடைய மகள் மட்டும் இருந்தனர். ஜெயக்குமாரின் மகள் அவரை கொலை செய்ய திட்டம் போட்ட சித்ரா அவர் தனது காதலன் பிரவீனை வரவழைத்துள்ளார்.

தனது பிளான் படி தூக்க மாத்திரைகள் கலந்த பாலை ஜெயக்குமாருக்கு அவருடைய மகள் கொடுத்தார். மயக்கம் வந்த நிலையில் அவர் வீட்டு படுக்கையறையில் படுத்து தூங்கினார். இதுபற்றி, தனது காதலன் பிரவீனுக்கு மெஸேஜ் அனுப்ப  பிரவீனும் ஜெயக்குமாரின் வீட்டுக்கு நள்ளிரவானதும் வந்தார். அப்போது படுக்கை அறையில் மயங்கிய நிலையில் படுத்து தூங்கிய ஜெயக்குமாரை அவர்கள் கத்தியால் சராமாரியாக குத்தி கொலை செய்தனர். அதன்பிறகு அவருடைய உடலை படுக்கை அறையில் இருந்து குளியல் அறைக்கு இழுத்து சென்றனர்.

பிறகு வீட்டு படுக்கை அறை உள்பட பல்வேறு இடங்களில் படிந்து இருந்த ரத்தகறையை சுத்தம் செய்துள்ளனர். கொலை செய்தது இரவில் என்பதால் அப்போது விட்டுவிட்டு அடுத்தநாள் அதாவது நேற்று முன்தினம் காலையில் குளியல் அறைக்கு ஜெயக்குமாரின் உடலை கொண்டு சென்றனர். அங்கு வைத்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் 2 பேரின் கால்களிலும் தீப்பற்றியதால் அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. இருப்பினும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியேறி சிகிச்சை பெற்று நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான ஜெயக்குமாரின் மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  சித்ரா மைனர் என்பதால் அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்க்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

click me!