அட பாவமே..! நாய் குரைத்ததால் ஆத்திரம்.. அரிவாள் கொண்டு ஒரே வெட்டு..இறுதியில் நடந்தது என்ன..?

By Thanalakshmi VFirst Published Apr 10, 2022, 11:23 AM IST
Highlights

நாய் குரைத்ததற்காக எதிரெதிர் வீட்டார்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அரிவாள் கொண்டு தாக்கியதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 

நாய் குரைத்ததற்காக எதிரெதிர் வீட்டார்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அரிவாள் கொண்டு தாக்கியதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை இந்திரா நகரில் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார் ராஜலட்சுமி. இவர் தன் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவர்களது எதிர் வீட்டில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு தனசேகர் வீட்டின் வழியே சென்றுள்ளார். அப்போது ராஜலட்சுமி வளர்க்கு நாய், அவரை பார்த்து போக விடாமல் குரைத்துக்கொண்டே இருந்ததாக சொல்லபடுகிறது. 

ஏற்கனவே தனசேகரன் குடிபோதையில் இருந்த நிலையில், ராஜலட்சுமியிடன் ”உங்க வீட்டு நாய், என்னை பார்த்து குரைக்கிறது' என கோபமாக பேசியுள்ளார். தொடர்ந்து  ராஜலட்சுமியும் பதிலுக்கு பேச ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தனசேகரன், வீட்டில் இருந்து அரிவாளால் எடுத்து வந்து ராஜலட்சுமியை வெட்டியுள்ளார். தடுக்க வந்த அவரது மகன்கள் திவாகரன், ரித்திஷுக்கும் வெட்டு விழுந்துள்ளது. 

பின்னர் வெட்டுகாயம் அடைந்த ராஜலட்சுமி மற்றும் அவரது இரண்டு மகன்களையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த மூவருக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் மோதலின்போது, திவாகரன், ரித்திஷ் ஆகியோர் பதிலுக்கு அரிவாளால் தனசேகரை வெட்டியுள்ளனர்.இந்த மோதலில் காயமடைந்த தனசேகரன் மற்றும் அவரது மனைவி திவ்யபாரதி ஆகியோர் காயமடைந்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இரு தரப்பும் அளித்த புகாரின்படி, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

 

click me!