குழந்தையை கொல்ல திட்டம் தீட்டும் அபிராமி, சுந்தரம்.! வெளிவந்த பகீர் ஆடியோ!

By vinoth kumarFirst Published Sep 16, 2018, 3:00 PM IST
Highlights

பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து குழந்தைகளைக் கொன்ற குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், தனது கள்ளக்காதலன் சுந்தரத்துடன், குன்றத்தூர் அபிராமி செல்போனில் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து குழந்தைகளைக் கொன்ற குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், தனது கள்ளக்காதலன் சுந்தரத்துடன், குன்றத்தூர் அபிராமி செல்போனில் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய். சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் விஜய் பணியாற்றி வருகிறார்.

விஜயின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி. சென்னை வங்கியில் வேலை கிடைத்ததால் இவர் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் கள்ளக்காதலுக்காக இரு குழந்தைகளை கொன்றுவிட்டு நாகர்கோவில் தப்பிஓடிய அபிராமியை போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில், அபிராமி பற்றிய பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகி வருகின்றன. 

இந்த நிலையில், அபிராமி தனது கள்ளக்காதலனுடன் வாழ ஆசைப்பட்டு, தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த பின் அன்று இரவு (30 ஆம் தேதி) தனது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் பேசிய செல்போன் உரையாடல் தற்போது வாட்ஸ்அப்களில் வைரலாக பரவி வருகிறது. அவர்களின் உரையாடல் இதோ...

சுந்தரம்: ஹலோ.. என்னாச்சி?

அபிராமி: குழந்தைங்க இரண்டு பேருக்கும் பால்ல 5 தூக்க மாத்திரை கலந்து குடுத்திருக்கேன். அவங்க நல்லா தூங்கற மாதிரி தான் இருக்கு. பெட்சீட் போத்தி வைச்சிருக்கேன்.. 

சுந்தரம்: செத்துட்டாங்களா?.... 

அபிராமி: 5 மாத்திர போட்டிருக்கேன்.. ஆனா தூங்கற மாதிரி தான் இருக்காங்க..

சுந்தரம்: என்ன பயமே இல்லாம பேசுற.. எனக்கே பயமா இருக்கு.. சரி இப்ப என்ன பண்ணலாம்.

அபிராமி: என்ன பண்றதுன்னு எனக்கும் தெரியல.. இரண்டு பேரும் எங்காவது ஓடி போயிரலாமா..

சுந்தரம்: ஓடி போறதுக்கு தானே இந்த பிளான் பண்ணேன். ஹவுஸ் ஓனர் இருக்காங்களான்னு  பாரு. 

அபிராமி: ராத்திரி 11 மணி ஆவுது. அவங்க யாரும் இருக்க மாட்டாங்க. 

சுந்தரம்: யாருமே இல்லல வெளிய.. 

அபிராமி: யாரும் இல்ல...

சுந்தரம்: எனக்கும் ஓட்டல்ல வேலை முடியப் போகுது. முடிஞ்ச உடனே வர்றேன். உன் வீட்டுக்காரர் வருவாரா இப்போ. 

அபிராமி: வருவாரான்னு எனக்கு தெரியலயே.. 

சுந்தரம்: வரலன்னா எனக்கு போன் பண்ணு. நான் சொல்ற இடம் வந்திரு. நாம காலைல ஓடி போயிரலாம். 

அபிராமி: அப்படியே செய்றேன்..

சுந்தரம்: கேக்குதா இல்லையா..

அபிராமி: ஆம் கேக்குது.

சுந்தரம்: பயப்படாத.. லைட் லாம் ஆப் பண்ணி வை.. திரு திருன்னு முழிக்காத...

அபிராமி: ஊம் சரி... 

என்று அவர்களது உரையாடல் முடிகிறது. அவர்களது இந்த செல்போன் பேச்சு, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

click me!