19 வயசு தான் ஆகுது.. கல்லூரியில் கர்ப்பத்தை கலைக்க முயன்ற மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்

Published : Apr 15, 2023, 05:48 PM IST
19 வயசு தான் ஆகுது.. கல்லூரியில் கர்ப்பத்தை கலைக்க முயன்ற மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்

சுருக்கம்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தனது கல்லூரி அறையில் கருக்கலைப்பு செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஒரு பயங்கர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

ஆந்திர பிரதேசத்தில் உள்ள  நெல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படிக்கும் மாணவி கருச்சிதைவு ஏற்பட்டு உயிரிழந்தது தாமதமாக தெரிய வந்தது. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, நெல்லூர் மாவட்டம், மரிபாடு மண்டலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் நெல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மேல்நிலைப் படித்து வந்தார். இம்மாதம் 11 ஆம் தேதி அனைத்து மாணவர்களும் கல்லூரி வளாகத்தில் வகுப்பிற்கு வெளியே இருந்தனர். வகுப்பறையில் யாரும் இல்லை. அப்போது வகுப்பில் மாணவி தனியாக இருந்துள்ளார். 

கதவு உள்ளே பூட்டியிருந்தது. நீண்ட நேரமாகியும் வெளிவரவில்லை.  இதன்போது மாணவிகள் வகுப்பறையில் இருந்ததை தேடியபோது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவிகள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, இளம்பெண் வகுப்பறையில் ரத்த வெள்ளத்தில் துடித்தார். உடனடியாக இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த நெல்லூர் ரூரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.  விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உண்மையில் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதா அல்லது யூடியூப் பார்த்து கருச்சிதைவு செய்ய முயன்றாரா என்பது குறித்த தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

படித்து, நல்ல வேலையில் இருந்து, மகள் எங்களைப் பார்த்துக் கொள்வாள் என்று நினைத்த பெற்றோருக்கு, இந்த மரணம் இடி விழுந்ததது போல் ஆகியுள்ளது. வகுப்பறையில் ஏன் இப்படி செய்தாள் ? அவள் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியுமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணின் செல்போன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அவருக்கு ஆனந்தசாகரின் கார் டிரைவரை தெரியும் என்பது தெரிய வந்துள்ளது. 

இதையும் படிங்க..எனக்கு வேற வழி தெரியல.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அண்ணாமலை - திமுக ஊழல் வீடியோ வெளியான பின்னணி 

மாவட்ட அளவில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக நெல்லூர் ரூரல் சிஐ சீனிவாசலு ரெட்டி தெரிவித்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரையால் ரத்தம் வெளியேறி இல்லத்தரசி உயிரிழந்த சம்பவம் பெங்களூரு உத்யன் நகரில் நடந்துள்ளது. பிரீத்தி குஷ்வாஸ் என்பவர் உயிரிழந்த பெண். கணவரிடம் சொல்லாமல் கருக்கலைப்பு மாத்திரையை உட்கொண்ட பிரீத்தி, மாத்திரை சாப்பிட்டதும் அந்த பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. 

இதனையடுத்து அந்த பெண் தனது கணவருக்கு இதுபற்றி தெரிவித்ததையடுத்து, அவர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் வழியிலேயே பிரீத்தி இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார். உயிரிழந்த பெண் ப்ரீத்திக்கு ஏற்கனவே 11 மாத ஆண் குழந்தை இருந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் கர்ப்பம் தரித்ததன் பின்னணியை பரிசோதித்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது ப்ரீத்திக்கு தெரிய வந்தது. இதுகுறித்து அந்த பெண் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். 

இந்த நேரத்தில், கணவன் மருத்துவரிடம் செல்வது குறித்து மனைவியிடம் கூறியுள்ளார்.  ஆனால் இதற்கு சம்மதிக்காத மனைவி ப்ரீத்தி, கணவருக்கு தெரிவிக்காமல் கருக்கலைப்பு செய்துவிட்டு ரத்தப்போக்கு அதிகரித்ததால் கணவருக்கு போன் செய்துள்ளார். ஆனால், கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே அப்பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பெண்ணின் சகோதரர் பேகூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க..சத்தமே இல்லாமல் அப்டேட்டை கொடுத்த பொன்னியின் செல்வன் 2 படக்குழு.. அடேங்கப்பா இப்படியொரு அப்டேட்டா

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!
ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி