பெற்ற தாயே 3 மாத பச்சிளங்குழந்தையை கிணற்றில் வீசி கொலை..! திடுக்கிடும் காரணம்..!

Published : Dec 15, 2018, 01:57 PM IST
பெற்ற  தாயே  3 மாத பச்சிளங்குழந்தையை கிணற்றில் வீசி கொலை..! திடுக்கிடும் காரணம்..!

சுருக்கம்

பெரம்பலூரில் வசித்து வரும் பச்சபிள்ளை மற்றும் கொவிந்தம்மாள் தம்பதிகள். இவர்களுக்கு ஆறு வயதில் ரஞ்சிதா என்ற மகள் உள்ளார். 

பெரம்பலூரில் வசித்து வரும் பச்சபிள்ளை மற்றும் கொவிந்தம்மாள் தம்பதிகளுக்கு ஆறு வயதில் ரஞ்சிதா என்ற மகள் உள்ளார். 

கோவிந்தமாளுக்கு இரண்டாவதாக, ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என பெரும் எதிர்பார்ப்பில் இருந்துள்ளனர். இந்த நிலையில் கருவுற்று இருந்த கோவிந்தம்மாள் தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்குமென எதிர்பார்த்து இருந்துள்ளார். ஆனால் பிறந்தது பெண் குழந்தை. இதனால் விரக்தி அடைந்து இருந்த கோவிந்தம்மாள், தான் பெற்ற பிள்ளை என்று கூட பார்க்காமல், பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசி துடிக்க  துடிக்க கொன்று உள்ளார் மனித மிருகமான இந்த  தாய்.

இது குறித்தது போலீசாருக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டதில், தனக்கு யாரோ மயக்க மருந்து கொடுத்து விட்டு குழந்தையை கடத்தி சென்று விட்டதாக பொய் தகவல் தெரிவித்து நாடகமாடி உள்ளார்.

ஆனால் சந்தேகம் அடைந்த போலீசார் கோவிந்தம்மாவிடம் துருவி துருவி கேள்வி கேட்டதில், தானே குழந்தையை கொன்று உள்ளதை ஒப்புக் கொண்டார். அதனை தொடர்ந்து இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!