தமிழகத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி ஊடுருவியது எப்படி... பரபரப்பு தகவல்..!

Published : Aug 23, 2019, 12:40 PM ISTUpdated : Aug 23, 2019, 12:42 PM IST
தமிழகத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி ஊடுருவியது எப்படி... பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

கோவையில் பதுங்கி இருந்த லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவ கேரளாவை சேர்ந்தவர்கள் உதவியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

கோவையில் பதுங்கி இருந்த லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவ கேரளாவை சேர்ந்தவர்கள் உதவியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும், விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையில் 6 பேரில் 5 இலங்கையை சேர்ந்தவர் என்றும், ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டு இருந்தது. மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து தமிழகம் முழுவதும் போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்

.

கோவையில் மட்டும் 200 போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பேருந்து நிலையில், இரயில் நிலையத்தில் பயணிகளை முழு பரிசோதனை செய்தனர். நகரில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வந்தனர். இதையடுத்து கோவை போலீஸார் பயங்கரவாதிகள் என சந்தேகித்து 3 பேரின் புகைப்படத்தையும், வாகனங்களின் எண்களையும் வெளியிட்டனர். தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்ததில் கேரளாவைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் இந்த ஊடுருவல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கணவர் கண் முன்னே கதறிய பெண்.. விடாமல் கூட்டாக சேர்ந்து குதறிய சிறுவர்கள் உட்பட 3 பேர்
சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?