வங்கிக்கு வரும் பெண்களை மயக்கி 40 பேருடன் உல்லாசம்... அதிகாரியின் வீடியோவை காட்டி மனைவி கதறல் வாக்குமூலம்..!

By Thiraviaraj RMFirst Published Feb 20, 2020, 11:31 AM IST
Highlights

செல்போனில் ஆபாச படங்களை எடுத்து தலைமறைவாக உள்ள வங்கி அதிகாரியை கைது செய்து விசாரணை நடத்தினால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என அவரது மனைவி கூறியுள்ளார். 

செல்போனில் ஆபாச படங்களை எடுத்து தலைமறைவாக உள்ள வங்கி அதிகாரியை கைது செய்து விசாரணை நடத்தினால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என அவரது மனைவி கூறியுள்ளார். 

தஞ்சை அருகே உள்ள கள்ளப்பெரம்பூர் வகாப் நகரை சேர்ந்தவர் அருள்மணி. இவருடைய மகள் தாட்சர். இவருக்கும், திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்த லூயிஸ் விக்டர் மகன் எட்வின் ஜெயக்குமார் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 2-ம்  தேதி மணப்பாறையில் திருமணம் நடந்தது. எட்வின் ஜெயக்குமார், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் காசாளராக பணி புரிந்து வருகிறார்.

திருமணத்துக்கு பின்னர் தாட்சர், மணப்பாறையில் உள்ள அவருடைய கணவர் வீட்டில் வசித்து வந்தார். திருமணமான சில நாட்களிலேயே எட்வின் ஜெயக்குமாரின் நடவடிக்கையில் தாட்சருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எட்வின் ஜெயக்குமார் அவருடைய மனைவி தாட்சரிடம் கூடுதலாக 50 பவுன் நகைகளை வரதட்சணையாக வாங்கி வருமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு நாள் தாட்சர், தனது கணவர் எட்வின் ஜெயக்குமாரின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அந்த செல்போனில் எட்வின் ஜெயக்குமார், பல பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தாட்சர், இது குறித்து தனது மாமியார் லில்லி ஹைடா, நாத்தனார் நிர்மலாமேரி, உறவுக்கார பெண் ரீட்டா ஆகியோரிடம் கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளாததால் இது தொடர்பாக தனது கணவரிடமே நேரடியாக கேட்டு விடுவது என்று முடிவு செய்தார். இதனையடுத்து தாட்சர் தனது கணவர் எட்வின் ஜெயக்குமாரிடம் கேட்டுள்ளார். அதைக்கேட்ட எட்வின் ஜெயக்குமார், இது தொடர்பாக இனிமேல் பேசினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று தாட்சருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வல்லம் அனைத்து மகளிர் போலீசார், எட்வின் ஜெயக்குமார் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 

 எட்வின் ஜெயக்குமாரின் நடவடிக்கைகள் குறித்து அவரது மனைவி அளித்த வாக்குமூலத்தில், ’’எட்வின் ஜெயக்குமார் திருமணமானதில் இருந்து இரவு நேரங்களில் செல்போனில் மூழ்கி விடுவார். இதனால் சந்தேகம் அடைந்து நான் அவரது செல்போனை ஆராய்ந்து பார்த்தபோது அந்த செல்போனில் பல பெண்களின் நிர்வாண படங்கள், பல பெண்களுடன் படுக்கையில் இருப்பது போன்ற படங்கள், வீடியோக்கள், ஆபாச உரையாடல்கள் அடங்கிய ஆடியோக்கள், வாட்ஸ்-அப் தகவல்கள் இருந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் எனது மாமியார், நாத்தனாரிடம் இது குறித்து கூறினேன். அவர்கள் இது குறித்து கவலைப்படாமல் என்னிடம் கூடுதல் வரதட்சணையாக 50 பவுன் நகைகளை கேட்டனர். எட்வின் ஜெயக்குமாரால் மேலும் ஒரு பெண் கர்ப்பமாக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.

வங்கிக்கு கடன் கேட்டு வரும் பெண்களுக்கு அவர் உதவி செய்வது போல நடித்து அவர்களின் வாழ்க்கையையும் சீரழித்து உள்ளார். இவரால் ஏமாற்றப்பட்ட பல பெண்கள் திருமணமானவர்கள் என்பதால் வெளியில் இது குறித்து அவர்கள் ஏதும் சொல்லவில்லை. அவர் தான் வசித்த பகுதியில் உள்ள பெண்களையும் அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக படம் பிடித்து உள்ளார். அவரால் மேலும் பெண்கள் ஏமாற்றப்படக்கூடாது என்பதற்காக நான் போலீசில் புகார் அளித்தேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

click me!