ஆபாச படம் பார்த்த 3000 ஆயிரம் பேர்..! பட்டியல் போட்டு பகீர் கிளப்பும் காவல்துறை..!

By Manikandan S R SFirst Published Dec 5, 2019, 1:03 PM IST
Highlights

ஆபாச படம் பார்த்தவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக காவல்துறை அதிகாரி ரவி தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு ஆபாச படம் பார்ப்பவர்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டது. அதில் உலகளவில் இந்தியாவில் தான் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அந்த எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது. அதிலும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி, தமிழகத்தில் சென்னையில் தான் அதிகளவிலானோர் ஆபாச படம் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள் சம்பந்தமான படங்களை தேடி, தரவிறக்கம் செய்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த மத்திய உள்துறை அமைச்சகம், அதை தமிழக காவல்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதனடிப்படையில் தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவலர்கள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

அதன்படி ஆபாச படம் பார்த்தவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் காவல்துறை அதிகாரி ரவி தெரிவித்திருக்கிறார். அப்பட்டியலில் சுமார் 3000 பெயர்கள் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பட்டியல் அனுப்பப்பட்டு ஆபாச படம் பார்த்தவர்கள் கைதாக கூடும் என அவர் எச்சரித்திருக்கிறார். மேலும் கடந்த 4 நாட்களில் சுமார் 50 ஆயிரம் ஆபாச படங்கள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக அவர் தகவல் அளித்துள்ளார்.

click me!