4 நாட்களாக ரூமில் வைத்து கதற கதற கற்பழித்த மாணவர்கள்!! காதலனை நம்பி சென்ற இளம் பெண்ணை வெறி தீர வேட்டையாடிய கும்பல்...

By sathish kFirst Published Jun 24, 2019, 3:39 PM IST
Highlights

காதலனை தேடி சென்ற இளம் பெண்ணை தொடர்ந்து 4 நாட்களாக ரூமில் அடைத்து வைத்து மாறி மாறி கற்பழித்த 4 மாணவர்கள் உட்பட 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்யப்பட்டனர்.

காதலனை தேடி சென்ற இளம் பெண்ணை தொடர்ந்து 4 நாட்களாக ரூமில் அடைத்து வைத்து மாறி மாறி கற்பழித்த 4 மாணவர்கள் உட்பட 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்யப்பட்டனர்.

இவருக்கும், குண்டூரைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த 15-ந்தேதி இளம்பெண் தனது காதலருடன் பேசிக் கொண்டிருந்தார். இதை இளம்பெண்ணின் பெற்றோர் கண்டித்தனர். இதுபற்றி தனது காதலரிடம் இளம்பெண் தெரிவித்தார். உடனே காதலன் ராமு, ஓங்கோல் பஸ்ஸ்டேண்ட்க்கு வந்து விடு, நான் வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன் என கூறினார். இதை நம்பிய இளம்பெண் கடந்த 16-ந்தேதி ஓங்கோல் சென்று பஸ் நிலையத்தில் காத்திருந்தார். ஆனால் காதலன் வெகுநேரம் ஆகியும் வரவில்லை.

அந்த இளம்பெண்ணிடம் செல்போன் இல்லை, எனவே அருகில் இருந்த ஒரு செல்போன் கடைக்கு சென்று அந்த கடையில் இருந்த ஷேக்பாஜிவிடம், தனது காதலனிடம் போனில் பேச வேண்டும் அதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். 2 கைகளும் ஊனமுற்ற அவர், இளம்பெண் சொன்ன நம்பருக்கு போன் செய்துள்ளார், ஆனால் யாரும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

நேரம் ஆக ஆக கண்கலங்கிக்கொண்டே இருந்துள்ளார். ஆனால், காதலன் வரவில்லை. இரவு 11 மணி ஆகியும் யாரும் இளம்பெண்ணை தேடி வரவில்லை. எனவே ஷேக்பாஜி அவளை பாதுகாப்பு கருதி கடைக்குள் வந்து இருக்கச் சொல்லியிருக்கிறார். அப்போது அவளிடம் நைசாக பேசிய ஷேக்பாஜி, இளம்பெண் தனது காதலனுக்காக தவிப்பதையும் தெரிந்து கொண்ட அவன், இன்று இரவு எங்கள் வீட்டில் தங்கிவிட்டு நாளை காலை உன் காதலனை பார்க்கலாம் என நம்பவைத்து, அந்த பெண்ணை அருகில் உள்ள மருந்து கடை மாடியில் உள்ள தனது ரூமிற்க்கு அழைத்துச் சென்றுள்ளான். 

ஹோட்டலிலிருந்து வரவழைத்த உணவு கொடுத்த சிறிது நேரம் இளம் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்த பின் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மறுநாள் தனது நண்பர்கள் ஸ்ரீகாந்த் ரெட்டி, மகேஷ்  மற்றும் பள்ளி மாணவன் ஒருவனும் சேர்ந்து கற்பழித்துள்ளனர்.

4 நாட்களாக அந்த இளம் பெண்ணை மாறி மாறி கற்பழித்துள்ளனர். அதுமட்டுமல்ல மேலும் 3 மாணவர்கள் வந்து அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர். 5 வது நாட்கள் அவர்களின் காம கொடூரத்தை தாங்கிக்கொள்ளமுடியாத அந்த பெண் அதிகாலை  தங்கியிருந்த அறையில் இருந்து தப்பி வந்துள்ளார். 4 நான்கு நாட்களாக நாசம் செய்யப்பட்டதால் உடல் தள்ளாடிய நிலையில் சோகமாக அழுது கொண்டிருந்த அந்த பெண் ஊர் காவல் படையைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு  எனக் கேட்டுள்ளார். அவரிடம் அந்த இளம் பெண்  தான் கொடூரர்களிடம் அனுபவித்த வேதனையை சொல்லி சொல்லி கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து அந்த இளம்பெண்  பெண்கள் பொதுநல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும், ஓங்கோல் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இளம் பெண்ணை கற்பழித்த ஷேக்பாஜி, அவருடைய நண்பர்கள் ஸ்ரீதர், மகேஷ், மற்றும் 4 மாணவர்கள் உள்பட மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும்,இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஓங்கோல் சென்று மகள் நிலையை அறிந்து கண்ணீர் விட்டு கதறியுள்ளார்கள்.

click me!