கமலக்கண்ணனின் காம லீலைகள்... 200 பெண்களை மிரட்டி ஆபாச படம்... பார்த்து அதிர்ந்துபோன போலீஸ்..!

By vinoth kumarFirst Published Apr 28, 2021, 4:34 PM IST
Highlights

கமலக்கண்ணன் வைத்திருந்த இரண்டு செல்போன்களையும் ஆய்வுசெய்த போலீசார் அதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் 500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதைப் பார்த்து  அதிர்ச்சி அடைந்தனர். 

கமலக்கண்ணன் வைத்திருந்த இரண்டு செல்போன்களையும் ஆய்வுசெய்த போலீசார் அதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் 500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதைப் பார்த்து  அதிர்ச்சி அடைந்தனர். 

புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த பெற்றோர் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளுக்கு ஆன்லைன் வகுப்பிற்காக ஆண்ட்ராய்டு போனை வாங்கிக் கொடுத்தனர். படிப்பில் சுட்டியான அந்தச் சிறுமி, எந்நேரமும் செல்போனிலேயே மூழ்கியிருந்திருக்கிறார். தங்கள் மகள் இரவு பகலாக செல்போனும் கையுமாக இருந்ததால், ஆன்லைன் வகுப்பில் நன்றாகப் படிக்கிறாள் என்று பெற்றோர் நினைத்து சந்தோஷப்பட்டனர். 

இந்நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு ஒருநாள் நள்ளிரவில் கண்விழித்து எழுந்த தாய் பக்கத்து அறையில் செல்போன் முன்பு தனது மகள் ஆடையின்றி நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பதறிப்போய் சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்த போது ஃபேஸ்புக் பிளாக்மெயிலரிடம் சிக்கிய விபரீதம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆன்லைன் வகுப்பிற்காக ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்திய சிறுமி  ஃபேஸ்புக் இன்ஸ்டால் செய்து சேலம் என்ற முகவரியில் இருந்த இளைஞருக்கு நட்பு அழைப்பும் விடுத்திருக்கிறார். அவரும் ஏற்றுக்கொள்ள இருவரும் சாதாரணமாக சாட் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

நாளடைவில் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறிய அந்த இளைஞர், அவருடன் பாலியல்ரீதியில் பேச ஆரம்பித்திருக்கிறார். சிறுமிக்கும் இந்த பேச்சுகள் பிடித்துவிடவே அவரும் தொடர்ந்திருக்கிறார். ஒருகட்டத்தில் அந்த இளைஞரின் வார்த்தையால் மூளை சலவை செய்யப்பட்ட அந்த சிறுமி மகுடிக்கு ஆடும் பாம்பாக மாறியுள்ளார்.அந்த இளைஞரை நம்பி தனது நிர்வாண போட்டோவையும், வீடியோவையும் அனுப்ப, பதிலுக்கு அந்த இளைஞரும் தனது அந்தரங்க வீடியோவை அனுப்பியிருக்கிறான். சில மாதங்களாக இது தொடர்ந்த நிலையில் ஒரே நாளில் பலமுறை ஆபாசமாக வீடியோ கால் பேசும்படி சிறுமியை வற்புறுத்தியிருக்கிறார் அந்த இளைஞர். சிறுமியால் அது முடியாமல் போகவே, `உனது வீடியோக்களை இன்டர்நெட்டில் விட்டுவிடுவேன் என்று மிரட்டத் தொடங்கியிருக்கிறார். அதனால் வேறு வழியின்றி சிறுமியும் பெற்றோருக்குத் தெரியாமல் `லைவ் சாட் வீடியோ கால் எனத் தொடர்ந்திருக்கிறார். இதனால், தான் நள்ளிரவு நேரத்திலும் ஆடையின்றி நிற்கும் பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

தனது மகளுக்கு நேர்ந்தது போல் மற்ற பெண்களிடமும் தொடரக் கூடாது என்று நினைத்து குழந்தைகள்நல பாதுகாப்புக் குழுவிடம் பெற்றறோர் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த முத்தியால்பேட்டை காவல்துறையினர், சிறுமியை மிரட்டிய ஃபேஸ்புக் முகவரியில் இருந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது  அவருக்கும் சிறுமிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. சிறுமியிடம் பேசியவர்  ஃபேஸ்புக்கில் போலிக் கணக்கை தொடங்கியதும் தெரியவந்தது. 

இதையடுத்து சைபர் க்ரைம் மூலம் நடத்திய  விசாரணையில் சிறுமியிடம் பேசிய செல்போன் எண்ணை பயன்படுத்திய பிளாக்மெயிலர் தஞ்சாவூரை சேர்ந்த எம்.ஏ., எம்.பில்., பி.எட் பட்டதாரியான கமலக்கண்ணன் என்பதும் தெரியவந்தது. திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் திருப்பூரில் சாயப் பட்டறை ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்த கமலக்கண்ணன் வீடியோ சாட்டிங் சேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். போலி  ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை ஏமாற்றிய அவர்களுடன் பாலில் ரீதியில் சாட் செய்து, காதலிப்பது போல நடித்து அவர்களிடம் ஆபாச வீடியோக்களை வாங்கிவைத்திருப்பது தெரியவந்திருக்கிறது.

கமலக்கண்ணன் வைத்திருந்த இரண்டு ஆண்ட்ராய்டு செல்போன்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, அதில் அந்த சிறுமி மட்டுமல்லாமல் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் 500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதை பார்த்து காவல்துறையினரே அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கமலக்கண்ணன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

click me!