Corona TN : குறைகிறது கொரோனா பாதிப்பு… 23,975ல் இருந்து 23,443 ஆக குறைந்தது ஒருநாள் தொற்று!!

By Narendran SFirst Published Jan 17, 2022, 8:40 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 23,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 23,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 23,975 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 532 குறைந்து 23,443 ஆக பதிவாகியுள்ளது. 1,40,268 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 23,443 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 23,443 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 6,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 6,124 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே 8,987 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து 6,124 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 23,421 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 22 பேர் என 23,443 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.


கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 20 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,009 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 10 பேரும் தனியார் மருத்துவமனையில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,52,348 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 1,42,476ல் இருந்து 1,52,348 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 13,551 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,74,009 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2,701 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2,236 ஆக குறைந்துள்ளது. அதே போல் கோவையில் 1,866 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2,042 ஆக அதிகரித்துள்ளது.


திருவள்ளூரில் 1,273 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,018 ஆக குறைந்துள்ளது. மதுரையில் 569 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 640 ஆக அதிகரித்துள்ளது. சேலத்தில் 529 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 466 ஆக குறைந்துள்ளது. ஈரோட்டில் 570 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 613 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 831 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 766 ஆக குறைந்துள்ளது. கன்னியாகுமரியில் 678 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 813 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சையில் 439 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 409 ஆக குறைந்துள்ளது. இதேபோல் திருச்சி 495, தி.மலை 231, கிருஷ்ணகிரி 298, கடலூர் 257, வேலூர் 269, ராணிப்பேட்டை 307, நெல்லை 331, விருதுநகர் 313, நீலகிரி 235, நாமக்கல் 290  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

click me!