
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 200க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 196 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 158 ஆக குறைந்துள்ளது. இதில் 85 பேர் ஆண்கள், 73 பேர் பெண்கள். 43,382 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 158 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 56 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் ஒருவர், தனியார் மருத்துவமனையில் ஒருவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,017 ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,414 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 512 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,10,740 ஆக உள்ளது.