எகிறி அடிக்கும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 20,528 பேருக்கு பாதிப்பு.. 49 பேர் பலி

By Thanalakshmi VFirst Published Jul 17, 2022, 10:26 AM IST
Highlights

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 20,528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 20,044 ஆக இருந்த நிலையில், இன்று 20,528 ஆக அதிகரித்துள்ளது. 
 

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 20,528 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று 20,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 20,528 ஆக அதிகரித்துள்ள்து. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,37,50,599 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க:3 வது நாளாக 20 ஆயிரத்துக்கும் மேல் பதிவான கொரோனா.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 17,790 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,30,81,441 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,43,449 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,25,709 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.20 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.32 % ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.48 % ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் 199.98 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 25,59,840  பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

click me!