3 வது நாளாக 20 ஆயிரத்துக்கும் மேல் பதிவான கொரோனா.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

By Thanalakshmi VFirst Published Jul 16, 2022, 10:47 AM IST
Highlights

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 20,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 20,038 ஆக இருந்த நிலையில், இன்று 20,044 ஆக அதிகரித்துள்ளது. 
 

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 20,044பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று 20,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 20,044 ஆக அதிகரித்துள்ள்து. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,37,30,071 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க:முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 18,301பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,30,63,651 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,40,760 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 56 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா… அதிகபட்சமாக சென்னையில் 618 பேருக்கு தொற்று!!

நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,25,660 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.20 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.32 % ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.48 % ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் 199.71 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 22,93,627 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:https://tamil.asianetnews.com/coronavirus/free-booster-vaccination-for-above-18-years-from-today-rf1u31

click me!