குறையும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 2,827 பேருக்கு தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

Published : May 12, 2022, 09:14 AM IST
குறையும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 2,827 பேருக்கு தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

சுருக்கம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.   

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,827 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,13,413 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2,897 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் இன்று சற்று அதிகரித்து 2,827 ஆக பதிவாகியுள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.61 சதவீதமாகவும் வாராந்திர தொற்று பாதிப்பு 0.74 சதவீதமாகவும் உள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 3,230 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,70,165 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.47 சதவீதமாக உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பினால் 19,067  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.74 சதவீதமாக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,24,181 ஆக உள்ளது. 

மேலும் படிக்க: TN Corona: தமிழகத்தில் இன்று 39 பேருக்கு கொரோனா… 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சீனாவை பயமுறுத்தும் புதிய கொரோனா வைரஸ்.. XBB வேரியண்ட் இந்தியாவிற்கும் பரவுமா?
குட் நியூஸ்!.. கொரோனா தொற்று இனி அவசரநிலை கிடையாது.. WHO வெளியிட்ட சூப்பர் தகவல்