இன்று ஒரே நாளில் 2,828 பேருக்கு தொற்று.. 14 பேர் பலி.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

By Thanalakshmi VFirst Published May 29, 2022, 10:15 AM IST
Highlights

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,828 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,828 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,828 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,26,11,370 ஆக உயர்ந்துள்ளது.  

மேலும் படிக்க: சற்று அதிகரித்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 56 பேருக்கு தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 2,035 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,26,11,370 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.75 சதவீதமாக உள்ளது. 

தற்போது கொரோனா பாதிப்பினால் 17,087  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.04 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,24,586 ஆக உள்ளது. நாட்டில் உயிரிழந்தோர் விகிதம் 1.22 சதவீதமாக குறைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 193.28 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,81,764 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Omicron : ஷாக்கிங் நியூஸ்.! இந்தியாவில் பரவிய புது வகை ஒமிக்ரான் தொற்று..நாடு முழுவதும் எச்சரிக்கை !

click me!