கொரோனா கூடாரமாக மாறும் அண்ணா பல்கலைக்கழகம்..? அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை..

By Thanalakshmi VFirst Published May 26, 2022, 9:33 AM IST
Highlights

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
 

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக சென்னை ஐஐடியில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்  தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் கொரோனா தொற்று பரவியுள்ளது.

மேலும் படிக்க: ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது... அரசுக்கு சாதகமான உயர்நீதிமன்ற தீர்ப்பு!!

இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் இதுவரை 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 160 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக சென்னை ஐஐடியில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்  தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் கொரோனா தொற்று பரவியுள்ளது.இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் இதுவரை 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 160 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: பிரதமர் மோடி சென்னை வருகை.. மாலை 3 மணி முதல் 8 மணி வரை இந்த சாலைக்கு தப்பி தவறிகூட வந்துடாதீங்க மக்களே.!

click me!