இன்று ஒரே நாளில் 12,899 பேருக்கு தொற்று.. இன்று மட்டும் 15 பேர் பலி.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

By Thanalakshmi VFirst Published Jun 19, 2022, 10:24 AM IST
Highlights

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12,899 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் மொத்தம் கொரோனா பாதிப்பினால் 72,474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,899 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  4,32,96,692 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து  8,518 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை  4,26,99,363 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.62 சதவீதமாக உள்ளது. 

அச்சறுத்தும் கொரோனா: 

தற்போது கொரோனா பாதிப்பினால் 72,474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம்  0.17 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,24,855  ஆக உள்ளது. நாட்டில் உயிரிழந்தோர் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 196.00 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,99,824 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

மேலும் படிக்க: Alert : தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. ஆட்சியர்களுக்கு அலெர்ட் கொடுத்த சுகாதாரத்துறை செயலாளர்

click me!