தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா… சென்னையில் 108 பேருக்கு தொற்று!!

By Narendran SFirst Published Sep 21, 2022, 10:17 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 496 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 509 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓர் ஆண்டில் சாதனைகளும், சர்ச்சைகளும்.. ஆளுநர் ஆர்.என் ரவியின் 1 வருட செயல்பாடு எப்படி?

நேற்று 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 108 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,041 ஆகவே உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,159 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 419 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,35,117 ஆக உள்ளது.

இதையும் படிங்க: TNPL தமிழ்நாடு நிறுவனத்தில் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. விவரம் உள்ளே

மாவட்ட வாரியாக: அரியலூர் 1, செங்கல்பட்டு 47, சென்னை 108, கோயம்புத்தூர் 37, கடலூர் 4, தர்மபுரி 3, திண்டுக்கல் 12, ஈரோடு 19, கள்ளக்குறிச்சி 1, காஞ்சிபுரம் 23, கன்னியாகுமரி 34, கரூர் 3, கிருஷ்ணகிரி 16, மதுரை 15, மயிலாடுதுறை 4, நாகப்பட்டிணம் 2, நாமக்கல் 2, நீலகிரி 7, பெரம்பலூர் 1, புதுகோட்டை 6, ராமநாதபுரம் 1, ராணிப்பேட்டை 17, சேலம் 23, சிவகங்கை 7, தென்காசி 5, தஞ்சாவூர் 6, தேனி 3, திருப்பத்தூர் 0, திருவள்ளூர் 23, திருவண்ணாமலை 4, திருவாரூர் 0, தூத்துக்குடி 12, திருநெல்வேலி 10, திருப்பூர் 16, திருச்சி 12, வேலூர் 5, விழுப்புரம் 8, விருதுநகர் 12 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.  

click me!