சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக படங்கள் எதுவுமின்றி வீட்டில் ஓய்வெடுத்துவரும் நடிகர் வடிவேலு, நிரந்தர ஓய்வை நோக்கிச் செல்கிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு அவர் கையிலிருக்கும் ஒரே படமான ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ யில் யோகி பாபு நடிக்கவிருப்பதாக நம்பகமான செய்திகள் நடமாடுகின்றன.
சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக படங்கள் எதுவுமின்றி வீட்டில் ஓய்வெடுத்துவரும் நடிகர் வடிவேலு, நிரந்தர ஓய்வை நோக்கிச் செல்கிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு அவர் கையிலிருக்கும் ஒரே படமான ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ யில் யோகி பாபு நடிக்கவிருப்பதாக நம்பகமான செய்திகள் நடமாடுகின்றன.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள். சில நாட்கள் படத்தில் நடித்த வடிவேலு ஆடை வடிவமைப்பாளரை மாற்றியது உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு விலகினார். இதனால் படப்பிடிப்பு நின்று போனது. அரங்கையும் பிரித்துவிட்டனர். இதனால் பலகோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.
’எனக்கே எண்ட் கார்டு போட்டு எகத்தாளமாடா பண்றீங்க. எனக்கு எண்டே கிடையாதுடா’ என்று ‘தலைநகரம்’ படத்தில் வடிவேலு பேசிய வசனம் உண்மையாக வேண்டுமானால், இனியும் கவுரவம் பார்க்காமல் வடிவேலு இப்படத்துக்கு உடனே ஆஜராகவேண்டும்.