சித்ரா அனுபவித்த டார்ச்சரை அம்பலப்படுத்தியதால் கொலை மிரட்டல் - ஹேம்நாத் மீது நண்பர் பரபரப்பு புகார்

By Ganesh AFirst Published Jul 20, 2022, 1:13 PM IST
Highlights

சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்துக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து வேண்டும் என ஹேம்நாத்தின் நண்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 

சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பூந்தமல்லி அருகே உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரின் இந்த விபரீத முடிவு ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த மர்ம மரணத்திற்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என சித்ராவின் பெற்றோரும், உறவினர்களும் குற்றம்சாட்டினர். இதையடுத்து ஹேம்நாத்தை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைந்து விசாரணை நடத்தினர். சில மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த ஹேம்நாத் அண்மையில் ஜாமினில் வெளியே வந்தார்.

இதையும் படியுங்கள்... VJ chitra : சித்ரா ஒன்னும் நல்லவ கிடையாது... டப்பா நிறைய காண்டம் இருந்துச்சு - பகீர் கிளப்பிய சித்ராவின் தோழி

சித்ரா மரணமடைந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், அவரது கணவர் குறித்து சித்ராவின் தோழி ரேகா நாயர் மற்றும் ஹேம்நாத்தின் நண்பர் சையத் ஆகியோர் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஹேம்நாத்திற்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி பகீர் கிளப்பினர்.

இந்நிலையில் சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்துக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து வேண்டும் என ஹேம்நாத்தின் நண்பர் சையத் ரோஹித் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து சாட்சியம் அளித்ததால், தனக்கு ஹேம்நாத் கொலை மிரட்டல் விடுப்பதாக சையத் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... சரக்கு, கஞ்சா, பொம்பளைங்க! இதுதான் அவன் வேலையே... சித்துவ அவன் தான் கொன்றுப்பான் - ஹேம்நாத்தின் நண்பர் புகார்

click me!