மகன் துருவ் விவகாரத்தில் துரதிர்ஷ்டவசமான முடிவெடுத்த நடிகர் விக்ரம்...

By Muthurama LingamFirst Published Jun 3, 2019, 5:56 PM IST
Highlights

தனது மகன் துருவின் முதல் படமான ‘ஆதித்ய வர்மா’ மீது நம்பிக்கையிழந்த நடிகர் விக்ரம் அப்படம் ரிலீஸாகும் முன்பே அடுத்த படத்தில் அவரை தள்ளியிருக்கிறார். அதுவும் தொடர்ந்து தோல்விபடங்கள் கொடுக்கும் ஒரு டைரக்டரோட என்பதுதான் துரதிர்ஷ்டமான சமாச்சாரம்.

தனது மகன் துருவின் முதல் படமான ‘ஆதித்ய வர்மா’ மீது நம்பிக்கையிழந்த நடிகர் விக்ரம் அப்படம் ரிலீஸாகும் முன்பே அடுத்த படத்தில் அவரை தள்ளியிருக்கிறார். அதுவும் தொடர்ந்து தோல்விபடங்கள் கொடுக்கும் ஒரு டைரக்டரோட என்பதுதான் துரதிர்ஷ்டமான சமாச்சாரம்.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள தேவி 2 படம் மே 31 ஆம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.இந்தப்படம் படு சொதப்பல்  என்றும் இது தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு  பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.

இப்படத்தின் இயக்குநர் விஜய், ஒரு படம் இயக்கும்போதே இன்னொரு படத்தை ஒப்பந்தம் செய்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த தேவி 2 வெளியாகிவிட்ட பின்பும் அடுத்த படம் பற்றி எந்தத் தகவலும் இல்லை.ஆனால் தகவல் வெளியே வரவில்லையே தவிர, அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டாராம் இயக்குநர் விஜய். நடிகர் விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக வைத்து அடுத்த படத்தை விஜய் இயக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

’தேவி 2’ ரிலீஸுக்கு முன்பே விக்ரம் மகனுக்காக விஜய் ஒரு கதை சொன்னதாகவும் அது விக்ரமுக்குப் பிடித்துவிட்டதால் படமாக எடுக்க சம்மதித்ததாகவும் தெரிகிறது. இயக்குநர் விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள், தாண்டவம் ஆகிய இருபடங்களில் விக்ரம் நடித்திருக்கிறார்.அதில் ‘தெய்வத் திருமகள்’ படம் ஓ.கே. ஆனால் ‘தாண்டவம்’ ஒரு தண்டமான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!