
மெர்சல் படத்தில் இடம் பெற்ற GST குறித்த வசனத்தை நீக்க வேண்டும் எனக் கூறி, பாஜக.,வினர் கொளுத்திப் போட்ட பிரச்னை தற்போது மிகப் பெரிய அளவில் பேசும் பிரச்சனையாக மாறியுள்ளது. ஏற்கெனவே இந்தப் படத்தில் இடம் பெற்ற எந்த ஒரு காட்சியையும் நீக்கக் கூடாது என பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்தை ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியும் மெர்சலுக்கு வந்துள்ள பிரச்சனை பற்றி தன்னுடைய கருத்தை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்... கருத்துச் சுதந்திரம் இல்லாமல் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லாதீர்கள், இது மெர்சலுக்காக மக்கள் குரல் கொடுக்கும் நேரம் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.