
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் "மாநாடு" படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. ஆரம்பத்தில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட படம், பல கட்ட பஞ்சாயத்துகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்க உள்ளது. அப்படத்தின் ஷூட்டிங் ஜனவரி 3வது வாரத்தில் தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்காக சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருந்த சிம்பு, நல்ல பிள்ளையாக மலைக்கு போய் திரும்பி வந்துவிட்டார். விட்ட இடத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்பதற்காக கடினமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் மாடல் போல செம்ம ஸ்டைலிஷ் ஆக இருந்த சிம்புவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் "மாநாடு" படத்தில் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் படக்குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.