
தளபதி, ஏ.ஆர்.ரஹ்மான், அட்லீ கூட்டணியில் ஏராளமான பொருட்செலவில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் சுமார் 3292 தியேட்டர்களில் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது மெர்சல். விஜய் மூன்று வேடத்தில் அசத்தியுள்ள இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கொஞ்சம் நஞ்சம் இல்லை, மிக பெரிய அளவில் காணப்படுகிறது.
இயக்குனர், தயாரிப்பாளர், எடிட்டர் என இப்படத்தைப்பற்றி அடிக்கடி புகைப்படங்கள், சுவாரஷ்ய தகவல்கள் என பலவற்றை ட்விட்டரிலும், பேட்டியிலும் வெளியிட்டு மேலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மெர்சலில் ஒவ்வொரு காட்சியும் மிரட்டுமாம், "நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்" என்ற வசனம் வரும் காட்சி ரசிகர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்துமாம். அதுமட்டுமல்லாமல் இடைவெளி காட்சி அனைத்தையும் விட செம மாஸாக இருக்கும் என்ற தகவல் கசிந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.