பழம்பெரும் இசையமைப்பாளர் மனைவி மாரடைப்பால் மரணம்!

Published : Jun 16, 2020, 12:06 PM IST
பழம்பெரும் இசையமைப்பாளர் மனைவி மாரடைப்பால் மரணம்!

சுருக்கம்

மறைந்த பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.ஜி.ராதாகிருஷ்ணனின் மனைவி, பத்மஜா ராதாகிருஷ்ணன் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.  

கடந்த 2010 ஆம் ஆண்டு மறைந்த பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.ஜி.ராதாகிருஷ்ணனின் மனைவி, பத்மஜா ராதாகிருஷ்ணன் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

(68) வயதாகும் பத்மஜா திங்கள்கிழமை (நேற்று) திருவனந்தபுரத்தில் காலமானார்.  இவருக்கு திங்கள் கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மூச்சி திணறலால் அவதிப்பட்ட இவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பத்மஜா, ஒரு பாடலாசிரியரும், புகழ்பெற்ற ஓவியரும் ஆவார். அவர் 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான ‘மிஸ்டர்’ படத்திற்கு பாடல் எழுதியிருந்தார். பின்னர், மறைந்த கணவர் இசையமைத்த சில படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். 

பத்மஜா ராதாகிருஷ்ணன் தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் எம்.ஆர்.ராஜகிருஷ்ணன் தற்போது சென்னையிலும், மகள் கார்த்திகா துபாயிலும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!